ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
'யான்' படத்தின் தோல்விக்குப் பிறகு கொஞ்சம் டல்லடித்த நடிகர் ஜீவாவின் கிராஃப் தற்போது உயர்ந்து வருகிறது. 2011ல் வெளிவந்த 'கோ' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜீவா அதன் பின் மிஷ்கின், கௌதம் மேனன் போன்ற இயக்குனர்களை நம்பி ஏமாந்து போனார். நடுவில் வந்த 'நண்பன்' மட்டுமே அவரைக் கொஞ்சம் காப்பாற்றியது. இருந்தாலும் தோல்வியைக் கண்டு துவளாத ஜீவா தற்போது நான்கைந்து படங்களில் மிகவும் பிஸியாக உள்ளார்.
ஜீவா நடித்துள்ள 'திருநாள்' படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. 'போக்கிரி ராஜா' படம் விரைவில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. இந்தப் படங்களையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் ஒரு படத்திலும், டீகே இயக்கும் 'கவலை வேண்டாம்' படத்திலும் நடிக்க உள்ளார். நயன்தாரா, ஜீவா, காஜல் அகர்வால் ஆகிய முன்னணி கதாநாயகிகள் தற்போது ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளனர். தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள சில முடிவுகளை எடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'திருநாள்' படம் வெளிவந்த பிறகு திரையுலகம் அவரை மீண்டும் திரும்பிப் பார்க்கும் என்கிறார்கள்.