ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அவர்களும் இவர்களும், அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை உள்பட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இடம் பொருள் ஏவல், குற்றமே தண்டனை படங்களைத் தொடர்ந்து நான் ஹலோ நான் பேய் பேசுறேன் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். அதோடு இந்த படங்களில் நான் என்னைச்சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொள்ளாமல் டைரக்டர்கள் என்னை நம்பிக்கொடுத்த வேடங்களில் துணிச்சலாக நடித்து வருகிறேன் என்கிறார் ஐஸ்வர்யா.
அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நான் நடித்த அட்டகத்தி படத்தில் பெங்களூரில் இருந்து வந்த நந்திதா கதாநாயகியாக நடித்தார். ஆனால் நான் செகண்ட் ஹீரோயினாகத்தான் நடித்தேன். அதற்காக நந்திதாவை நான் போட்டி நடிகையாக பார்க்கவில்லை. அந்த படத்தில் இருந்தே எங்களுக்கிடையே நட்பு ஏற்பட்டு இப்போது வரை தொடர்ந்து வருகிறது. அதைத் தெடர்ந்து இப்போதும் எனக்கு கிடைக்கிற வேடங்களில் நல்லதாக ஓகே பண்ணி மற்ற ஹீரோயின்களுடன் எந்தவித ஈகோவும் பார்க்காமல் நடித்து வருகிறேன்.
அதேபோல், நான் பாசிட்டீவான வேடம், என்னை அழகாக காண்பிக்கும் வேடம் என்ற கோணத்தில் கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில்லை. எனக்கு நடிக்க என்ன ஸ்கோப் உள்ளது என்பதைதான் கவனிப்பேன். அப்படித்தான் காக்கா முட்டை படத்தில்கூட இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்தேன். அதேபோல் இப்போது அதே மணிகண்டன் இயக்கத்தில் விதார்த் நடித்துள்ள குற்றமே தண்டனை படத்திலும் எனக்கு வித்தியாசமான கதாநாயகி வேடம் கிடைத்துள்ளது. இந்த படம் எனது இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும். தொடர்ந்தும் இதுமாதிரி என்னை மாறுபட்ட வேடங்களில் வெளிப்படுத்தும் கேரக்டர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன். குறிப்பாக, நான் கேரக்டர்கள் விசயத்தில் இமேஜ் பார்ப்பதில்லை. பர்பாமென்ஸ் பண்ண எந்த அளவுக்கு வாய்ப்பு உள்ளது என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நடிப்பேன் ஐஸ்வர்யா ராஜேஷ்.