ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உலக அழகியாக தேர்வான பிறகு 1997ல் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யாராய். அதன்பிறகு பிரசாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்திலும் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாகி விட்ட ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்ட பிறகும் சினிமாவில் நடித்து வந்தவர், மகள் ஆரத்யா பிறந்த பிறகு சில ஆண்டுகள் மட்டும் நடிப்புக்கு இடைவெளி கொடுத்தவர், தற்போது ஜாஸ்பா படம் மூலம் பாலிவுட்டில் தனது மறுபிரவேசத்தை தொடங்கியிருக்கிறார்.
மேலும், கேங்ஸ்டர் படமான ஜாஸ்பா படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்துள்ள ஐஸ்வர்யாராய், அடுத்தபடியாக துர்காராணி சிங் என்றொரு புதிய படத்தில் நடிக்கிறார். ஜாஸ்பா படத்தைப்போலவே இந்த படமும் கதாநாயகியை மையப்படுத்தும் ஆக்சன் கதைதானாம். அதோடு, இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் இரண்டுவிதமான வேடங்களில் நடிக்கிறாராம். அதாவது, 35 வயது மற்றும் 14 வயது பெண் வேடம் என இரண்டுவிதமாக தோன்றுகிறாராம். தற்போது 41 வயதாகும் ஐஸ்வர்யாராய் இந்த 14 வயது பருவப் பெண் வேடத்துக்காக தனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்து இளவட்டமாக நடிக்க உள்ளாராம். ஆக, இந்த படத்தை முடித்த பிறகே ரஜினி நடிக்கும் எந்திரன்-2 படத்தில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.