டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திருமணத்திற்குப்பின் நடிப்பதை குறைத்துக்கொண்டார் அமலாபால். காரணம் பிரபலமான நடிகையாக பீக்கில் இருக்கும்போதே கல்யாணம் செய்துகொண்ட நடிகைகள் சந்திக்கும் தொடர்ந்து நடிப்பதா, குடும்பத்தை கவனிப்பதா என்கிற பிரச்சனை தான் அவருக்கும். இந்த கேப்பில் சின்னத்திரை ஷோ ஒன்றில் நடுவராக கலந்துகொள்ளவும் செய்தார். இந்தநிலையில் தான் பாண்டிராஜின் இயக்கத்தில் 'பசங்க-2' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது.. நல்ல ஸ்க்ரிப்ட் என்பதால் கணவர் விஜய்யும் சம்மதம் சொல்ல அதில் நடித்துக்கொடுத்தார்.
இன்னொருபக்கம், இந்த வருட ஆரம்பத்தில் அமலாபால் நடித்து மலையாளத்தில் வெளியான 'மிலி' படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் தொடர்ந்து வேறு எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வந்த அமலாபாலை, மலையாள இயக்குனர் போபன் சாமுவேல் சொன்ன கதை மிகவும் கவர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மூன்று படங்களை இயக்கியுள்ள போபன் சாமுவேலின் இந்த புதிய படத்தில் குஞ்சாக்கோ போபனும் ஜெயசூர்யாவும் கதாநாயகர்களாக நடிக்க இருக்கிறார்கள். தனது மூன்று படங்களையும் இவர்கள் இருவரை வைத்தே மாறி மாறி எடுத்தார் போபன் சாமுவேல். நான்காவது படத்தில் இவர்கள் இருவரும் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், அமலாபால் தரப்பில் இருந்து க்ரீன் சிக்னலுக்காக காத்திருக்கிறாராம் போபன் சாமுவேல்.