அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
ரஜினி முருகன் படம் வெளிவர வாய்ப்பில்லை என்பதால் அதை மறந்துவிட்டு தற்போது தன்னுடைய மானேஜர் ஆர்.டி.ராஜாவின் பெயரில் '24AM ஸ்டுடியோ' நிறுவனம் சார்பில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் அடுத்த படத்தை 'நானும் ரௌடிதான்' பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் இப்படத்தை தயாரிக்கப்போகிறார்.
இவரது தயாரிப்பில் அஜித் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த 'வேதாளம்' படம் இதுவரை 30 கோடிக்கு மேல் வசூல் செய்து பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கிடைத்த லாபத்தை அப்படியே தன் அடுத்தப் படத்துக்கான முதலீட்டாக்கிவிட்டார் ஏ.எம்.ரத்னம். அதாவது, தனது படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார் ஏ.எம்.ரத்னம்.
சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட் கேட்டு பிரபல தயாரிப்பாளர்கள் சிலர் அப்ரோச் செய்திருந்தனர். அவர்களை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்து விட்டு ஏ.எம்.ரத்னத்துக்கு உடனடியாய் சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுக்க என்ன காரணம்? ஏ.எம்.ரத்னம் தருவதாக சொன்ன பெரிய சம்பளம்தான் காரணம் என்கிறார்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள். சிங்கிள் பேமெண்ட்டாக 25 கோடி தருவதாக சொன்னதால்தான் ஏ.எம்.ரத்னத்துக்கு உடனடியாய் சிவகார்த்திகேயன் டேட் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது.