தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல்ஹாசன் நடித்துள்ள தூங்காவனம் படம் கடந்த 10ந் தேதி தமிழ்நாட்டில் வெளிவந்து தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பான செக்கட்டி ராஜ்யம் வருகிற 20ந் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளிவருகிறது.
இதையொட்டி கமல் நேற்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். அவரை பொன்னாடை போர்த்தி வரவேற்ற முதல்வர் நினைவு பரிசும் அளித்தார். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் செக்கட்டி ராஜ்யம் பிரிமியர் ஷோவுக்கு வருமாறு சந்திரபாபு நாயுடுவை அவர் அழைத்தார். அவரும் வருவதாக ஒப்புக் கொண்டார்.
இன்று கமல் தெலுங்கானாக முதல்வர் சந்திசேகரராவை சந்தித்து அவரையும் பிரிமியர் ஷோவுக்கு அழைக்க இருக்கிறார். இரு மாநில முதல்வர்களுக்கும் 6 மணி நேர இடைவெளியில் பிரிமியர் ஷோ காட்ட ஏற்பாடு செய்கிறார் கமல். படத்தின் நட்சத்திரங்கள் ஆந்திராவாவிலிருந்து தெலுங்கானாவுக்கு செல்ல பயண நேரம் இந்த 6 மணிநேரம்.