டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பசங்க, களவாணி, வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை உள்பட பல படங்களில் நடித்தவர் விமல். நகரம், கிராமம் என இரண்டுவிதமான கதைகளிலும் அவர் நடித்திருந்தபோதும், கிராமத்து கதைகளே விமலுக்கு பொருத்தமாகவும், வெற்றிகளையும் கொடுத்தன. அப்படி அவர் நடித்ததில் ராஜ்கிரணுடன் இணைந்து விமல் நடித்த மஞ்சப்பை குறிப்பிடத்தக்கது. ராஜ்கிரண், விமல், லட்சுமிமேனன் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி நடித்திருந்தனர்.
அதோடு, அந்த படத்தில் நடித்து வந்தபோது ராஜ்கிரணுடன் நெருங்கி பழகியிருக்கிறார் விமல். சாதாரணமாக யாரிடமும் நெருங்காத அவர், ராஜ்கிரணின் மீதுள்ள மரியாதை காரணமாக அவரிடம் அவ்வப்போது மனம் விட்டு பேசியிருக்கிறார். அப்படி தொடங்கிய நட்பு இப்போது ரொம்ப உறுதியாகி விட்டது. தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ராஜ்கிரணை நேரில் சென்று பார்த்து விட்டு வருகிறாராம் விமல். மேலும், சினிமா சம்பந்தப்பட்ட ஏதாவது விழாக்களுக்கு ராஜ்கிரண் செல்வது தெரிந்தால் விமலும் ஆஜராகி விடுகிறார். அவருடன் வருபவர், அவர் செல்லும்போது தானும் அங்கிருந்து வெளியேறி விடுகிறார் விமல்.