'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
செய்தியின் தலைப்பைப் பார்த்து யாரும் அதிர்ச்சியடைய மாட்டீர்கள் என்று தெரியும். த்ரிஷா நடித்துள்ள 50வது படமான 'தூங்காவனம்' நேற்று வெளியாகி, அவருக்கு ஒரு சாதனை மைல்கல்லைத் தொட வைத்திருக்கிறது. படமும், த்ரிஷாவின் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழில் 50 படங்களைக் கடந்து சாதனை புரிந்த நடிகைகளின் வரிசையில் த்ரிஷாவும் வெற்றிகரமாக இடம் பெற்றுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் சிம்ரனுக்குப் பிறகு அதிகம் பரபரப்பாகப் பேசப்பட்ட நடிகை த்ரிஷா மட்டுமே. தமிழ், தெலுங்கில் அதிகப் படங்களில் நடித்துள்ள த்ரிஷா ஹிந்தி, மலையாளத்தில் தலா ஒரு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இரு மொழிகளில் மட்டுமே அதிகம் நடித்து 50 படங்களை எட்டியிருப்பது சாதாரண விஷயமல்ல. 2002ம் ஆண்டு வெளிவந்த 'மௌனம் பேசியதே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா அன்றிலிருந்து இன்றுவரை புகழின் வெளிச்சத்திலேயே இருந்து வருகிறார்.