நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
சின்ன பாப்பா பெரிய பாப்பா, மடிப்பாக்கம் மாதவன் உள்பட பல தொடர்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமாகியிருப்பவர் நடிகர் ஸ்டீபன். நான் சிறிய வேடம், பெரிய வேடம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. எனக்கு தரப்படும் கதாபாத்திரத்தில் நான் ஸ்கோர் பண்ண எந்த அளவுக்கு வாய்ப்பு உள்ளது என்பதைதான் கவனிப்பேன். அந்த வகையில், சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் காமெடியனாக வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்கிறார் ஸ்டீபன்.
தனது காமெடி பயணத்தைப்பற்றி அவர் கூறுகையில்,
எனது சொந்த ஊர் தூத்துக்குடி. நான் சிறுவனாக இருந்தபோதே மேடை நாடகங்கள் இயக்கி நடித்திருக்கிறேன். அப்படி நான் இயக்கிய எல்லா நாடகங்க ளுமே காமெடியை மையப்படுத்தியதாகத்தான் இருந்தன. காரணம் எனக்கு காமெடி சென்ஸ் அதிகம். அதற்கேற்ப நடிக்க வேண்டும் என்று சென்னை வந்தபோது காமெடியனாக நடிக்கும் வாய்ப்புகளே எனக்கு கிடைத்தது.
குறிப்பாக, ஏய் படத்தில் வடிவேலுவுடனும், துரை படத்தில் விவேக்குடனும் காமெடியனாக நடித்தபோது எனது நடிப்பைப்பார்த்த டைரக்டர் ஏ.வெங்கடேஷ் எனக்கு தனது படங்களில் தொடர்ந்து காமெடி வேடங்கள் கொடுத்தார். அதோடு என்னை தனது உதவி இயக்குனராகவும் வைத்துக்கொண்டார். அந்த வகையில், அவரிடத்தில் 15 படங்களில் வேலை செய்திருக்கிறேன்.
ஆனபோதும், நான் நடிப்பை விடவில்லை. தொடர்ந்து சீரியல், சினிமா என இரண்டு மீடியாக்களிலும் நடித்து வந்தேன். அந்த வகையில், சின்னத்திரையில்
மண்ணின் மைந்தர்கள் என் சீரியலில்தான் முதன்முதலாக நடித்தேன். அதில் ஒரு சீனில்தான் நடிக்க சென்றேன். எனது நடிப்பு நன்றாக இருப்பதாக சொல்லி என் கேரக்டரை பெருசுபடுத்தினர். அதில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதன்பிறகு சின்ன பாப்பா பெரிய பாப்பா, மடிப்பாக்கம் மாதவன் ஆகிய காமெடி தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு தொடர்களுமே சின்னத்திரையில் எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்புகள்.
அதில், சின்ன பாப்பா பெரிய பாப்பாவில் மெயின் கேரக்டரில் ஒரு ஐந்து பேர் நடிக்கிறார்கள். அதுதவிர மற்ற கேரக்டர்கள் தேவைப்பட்டால் என்னைதான் அழைப்பார்கள். சில சமயங்களில் பெரிய கேரக்டரும் கிடைக்கும். எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க நான் விரும்பினாலும், காமெடி வேடங்கள்தான் கிடைக்கிறது. அதனால் எனக்கு பிடித்தமான காமெடி டிராக்கிலேயே பயணித்துக்கொண்டிருக்கிறேன்.
மேலும், இப்படி தொடர்ந்து நடித்து வந்தபோதும், மார்கழி 16 என்ற படத்தை இயக்கினேன். இப்போது ஒரு காமெடி கதையை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். மிர்ச்சி சிவா, விமல் போன்ற காமெடி சென்ஸ் உள்ள ஹீரோக்கள் யார் நடித்தாலும் இந்த கதை சூட்டாகும். இவர்களுடன் சூரியும் இணைந்தால் அருமையாக இருக்கும். என்னைப்பொறுத்தவரை காமெடி மூலம் கருத்து சொல்ல வேண்டும் என்ற நோக்கமெல்லாம் இல்லை. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்கிற மாதிரி ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது மட்டும்தான். சிந்திக்க வைக்கும் நோக்கமெல்லாம் கிடையாது.