ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த சில மாதங்களாக தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பிஸியாக இருந்த விஷால், அந்த தேர்தலில் வெற்றி பெற்றதோடு, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ளார். தற்போது பாண்டிராஜின், கதகளி படத்தில் நடித்து வருகிறார் விஷால். இருந்தபோதும் நடிகர் சங்க விசயத்தில், தொடர்ந்து ஈடுபடுத்தி வருகிறார். கடந்த சிலதினங்களுக்கு முன்னர் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து சங்க நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார்.
இந்நிலையில் விஷால் அளித்த பேட்டியில்... நடிகர் சங்கத்திற்கு ஜனவரி மாதம் புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கும், அப்போதிலிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டடம் கட்டி முடிக்கப்படும். காவிரி பிரச்னையில் நடிகர்கள் தலையிட முடியாது, இந்த விஷயத்தில் அரசு தான் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும். தொடர்ந்து ஈழ தமிழர்கள் விவகாரத்தில் நடிகர் சங்கம் குரல் கொடுக்கும்.
தற்போது நான் ராதாரவியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறேன். எங்களுக்குள் எந்த பகையும், பிரச்னையும் இல்லை. சரத்குமாரை இன்னும் சந்திக்கவில்லை. நான் அரசியலுக்கு வருவதாக சிலர் கூறுகிறார்கள். தற்போதைக்கு எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை. எனது கவனம் எல்லாம் தற்போதைக்கு சினிமாவில் மட்டும் தான்.
இவ்வாறு விஷால் கூறினார்.