தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லிங்கா படத்திற்கு பிறகு ரஜினி, இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் நடித்து வருகிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், ரித்விகா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டான் பின்னணியில் உருவாகும் இப்படத்தை தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங், தமிழ்நாடு தாண்டி இந்தியா கடந்து மலேசியா வரை பரபரத்துக் கிடக்கிறது, கபாலி' ஜூரம். அந்த கபாலி' ஹீட் அப்டேட் சில...
வெண் தாடியோடு வீராவேசத்துடன் டான் ஆக வரும் ரஜினி, ஃப்ளாஷ்பேக்கில் கருந்தாடியோடு கம்பீரமாக வரும் ரஜினி... என ரசிகர்களுக்கு டபுள் விருந்து தர இருக்கிறார் கபாலி'. கருந்தாடி ரஜினிக்கு ராதிகா ஆப்தே ஜோடி. ரஜினியின் மகளாக நடிக்கும் தன்ஷிகா, பார்க்க ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு படம் முழுக்க துப்பாக்கியும் கையுமாகத் திரிபவர், பாப் கட்டிங்கில் ஃபாரின் லுக்குக்கு மாறியிருக்கிறாராம்.
ரஜினி, மலேசியா புறப்படுவதற்கு முன்னரே, கபாலி' யூனிட் அங்கு சென்றுவிட்டது. அங்கே கபாலி' ஸ்பெஷல் கான்ஃப்ரென்ஸ் கூட்டம் நடந்துள்ளது. அதில் மலேசியாவின் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ரஜினி சார்... இந்தியாவின் லெஜண்ட். அவரைப் பாதுகாக்கவேண்டியது எங்கள் கடமை. அவர் தங்கும் இடம் உள்பட அவர் செல்லும் இடங்களில் எல்லாம், சிறப்புப் பாதுகாப்பு வசதி செய்ய உள்ளோம்' எனச் சொல்லி முழு படப்பிடிப்பு விவரங்களையும் கேட்டு வாங்கிக்கொண்டார்களாம்.
மலேசியாவில் விமானம் நிற்கும் இடத்துக்கும் இமிகிரேஷன் ஆபீஸுக்கும் இடையே 1 கி.மீ தொலைவு இருக்கும். ஆனால், ரஜினி யாரையும் சட்டை செய்யவில்லை. ஓட்டமும் நடையுமாக அந்தத் தொலைவைக் கடகடவெனக் கடக்க ஆரம்பித்துவிட்டார். போஸீஸ் உள்பட பலரும் ரஜினியின் நடை வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவர் பின்னால் ஓடிவந்தனர். அவரின் வேகம் கண்டு அங்கு உள்ள அதிகாரிகள் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
மலாக்கா கவர்னர், ரஜினியைத் தனது மாளிகைக்கு அழைத்தார். ரஜினிக்கு என ஸ்பெஷலாகச் சமைப்பதற்கு காரைக்குடியில் இருந்து சமையல்காரரை வரவழைத்து இருந்தார். வாழை இலையில் நீர்தெளித்து, தமிழ்நாடு ஸ்டையில் ரஜினிக்கு விருந்தோம்பல் கொடுத்தார். அப்போது ரஜினி சார்... நீங்கள் நடிச்ச முத்து' படத்தை, பத்துத் தடவைக்கும்மேல பார்த்திருக்கேன்' என கவர்னர் குஷியாகச் சொல்ல... அப்படியா?!' என ரஜினி ஆச்சர்யப்பட்டார்.
மலாக்காவில் எங்கே, எப்போது, எந்த இடத்தில் வேண்டுமானலும் ஷூட்டிங்கை நடத்திக்கொள்ளலாம்' என அதன் கவர்னர் கபாலி'க்கு ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத்துள்ளார். மலாக்கா ஜெயிலில் ஷூட்டிங் நடந்தபோது, படப்பிடிப்பு வசதிக்காக அங்கு இருந்த 300 பெண் கைதிகளை வேறு சிறைக்கு இடம் மாற்றியுள்ளனர். இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் கவர்னரே முன்நின்று செய்தாராம்.
ரஜினியுடன் நடித்துவரும் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா, தினேஷ், கலையரசன் உள்ளிட்ட கபாலி டீம் அனைவருமே தீபாவளிக்கு சென்னை வரவில்லை. அடுத்த மாதம் வரை மலேசியாவில் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்கள். ரஜினியும் மலேசியா விலேயே கபாலி' யூனிட்டுடன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்.
கபாலி'க்காக தற்போது வரை மலேசியாவில் இருக்கும் ரஜினி, நவம்பர் 26-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு நான்கு நாட்கள் தங்கி ஷங்கர், அர்னால்டு உடன் எந்திரன்-2' படத்துக்கான ஆரம்பகட்ட வேலைகளைச் செய்துவிட்டு, மீண்டும் மலேசியாவுக்கே திரும்புகிறார்.