'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து தேசிய விருது பெற்ற வித்யாபாலன், அடுத்து முன்னாள் பிரமதர் இந்திராவாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது அவர் பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரையாவாக நடிக்க இருக்கிறார். மலையாளத்தின் பிரபல எழுத்தாளரான கமலா பிற்காலத்தில் இஸ்லாம் மதத்தை தழுவி சுரையாகவாக வாழ்ந்தார். மாதவிக்குட்டி என்ற தலைப்பிலும், என் கதை என்ற தலைப்பிலும் அவர் எழுதிய சுயசரிதையின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.
முதல் மலையாளப்படத்தை இயக்கிவரும், மலையாள சினிமாவின் தந்தையாக போற்றப்படுகிற வருமான ஜே.சி.டேனியல் கதையை இயக்கிய கமல் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். "கமலா சுரையா படத்தின் ஸ்கிரிப்டை மூன்று பகுதியாக எழுதி முடித்துவிட்டேன். அவர் கேரக்டரில் வித்யாபாலன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவரிடம் கதை சொன்னேன். நடிக்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை" என்கிறார் இயக்குனர் கமல்.