'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோவாவில் வரும் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ள 46வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 'பாகுபலி' படம் தேர்வுக் குழுவினர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகத்திலிருந்து 'பாகுபலி, ஸ்ரீமந்துடு' உள்ளிட்ட ஐந்து படங்கள் திரையிடப்படுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஐந்து படங்களையும் நிராகரித்துவிட்டார்கள். ஹிந்தி, பெங்காலி, மலையாள மொழிகளில் வெளியான படங்களைத்தான் அதிகமாகத் தேர்வு செய்துள்ளார்களாம். இது தெலுங்குத் திரையுலகனரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
'பாகுபலி' படம் உலக அளவில் பாராட்டுக்களைப் பெற்று கனடா, புசான் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. ஆனால், இந்தியாவில் நடைபெறும் ஒரு திரைப்பட விழாவில் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது 'பாகுபலி' படக் குழுவினரையும் வருத்தப்பட வைத்துள்ளது. இந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் விதிமுறைக்கு உட்பட்டு 'பாகுபலி' படம் அமையவில்லை என்பதாலேயே படம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் தமிழிலிருந்து 'ரேடியோ பெட்டி' படம் மட்டும் திரையிடத் தேர்வாகியுள்ளது.