இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கமலிடன் உதவியாளராக இருந்த ராஜேஷ் எம்.செல்வா, துாங்காவனம் படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜா, ஆஷா சரத், கிஷோர், சம்பத் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் நவம்பர் 10ம் தேதி தீபாவளி விருந்தாக வர உள்ளது. படம் இயக்குனர் ராஜேஷ் செல்வா அளித்த சிறப்பு பேட்டி இதோ...
* ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அனைவருக்கும், தீபாவளி வாழ்த்துகள்! இந்த தீபாவளி, எனக்கு ஸ்பெஷல்; நான், இயக்கிய, துாங்காவனம் படம் வெளியாகிறது. இப்படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்; சிடி அல்லது இணைய தளத்தில் பார்க்க வேண்டாம். கூடிய விரைவில் நாங்களே, சிடியாக வெளியிடுவோம். அதுவரை தியேட்டருக்கு சென்று படம் பாருங்கள்.
* கமலுடன் பணியாற்றியது குறித்து?
கமலை, 2008ல் சந்தித்தேன்; அவரது, மர்மயோகி படத்தில், மூன்றாவது உதவி இயக்குனராக பணியாற்றினேன். ராஜ்கமல் நிறுவனத்தில் சேர்ந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். கமல் எதையுமே, கற்றுக்கொள் என, கூறவில்லை. அவர், என்னை கொண்டு போன விதத்
திலேயே நிறைய கற்று கொண்டேன்.
மன்மதன் அம்பு படத்தில், கோ-ஒர்க் அசிஸ்டென்ட்டாக பணியாற்றினேன். அதன்பின், விஸ்வரூபம் - 1, 2ல் பணியாற்றினேன். உத்தமவில்லன் படத்தில், முதன்மை உதவி இயக்குனரானேன். கமலிடம் வேலை பார்ப்பது என்றால், 200 சதவீதம் வேலை தெரிந்து இருக்க வேண்டும். அவருடன் வேலை பார்ப்பது கடினமானது இல்லை; ஆனால், வேலை தெரிந்து இருக்க வேண்டும்.
* துாங்காவனம் படம் எப்படி உருவானது?
ராஜ்கமல் நிறுவனத்திற்காக படம் எடுக்க வேண்டும் என்றனர். ஆனால், கமலை வைத்து படம் இயக்குவேன் என, நினைக்கவில்லை. பல படங்கள் பற்றி பேசினோம்; பிரெஞ்ச் மொழியில் வெளியான, நியூ பிராஞ்ச் பட கதை நன்றாக இருப்பதாக கமல் கூறினார். அதை பார்த்த போது பிடித்திருந்தது. அப்படத்தின் உரிமையை ராஜ்கமல் நிறுவனம் வாங்கியது. நீங்கள் தான் இயக்குகிறீர்கள் என, கமல் சொன்ன போது மிகவும் சந்தோஷம் அடைந்தேன். என் கனவு, கமலை நடிக்க வைப்பதை விட, அவரது திரைக்கதையில் படம் எடுக்க நினைத்தேன். அவர், துாங்காவனம் படத்திற்கு, திரைக்கதை எழுத, என் கனவு நிறைவேறியது.
* துாங்காவனம் பற்றி, ஒரே வரியில் சொல்வீர்களா?
இப்படத்தைப் பற்றி, ஒரே வரியில் கூற முடியாது; நான்கு, ஐந்து வரிகள் வேண்டும். இது, சந்தோஷமான படம். தந்தை - மகன்; கணவன் - மனைவி; உடன் வேலை பார்ப்பவர்கள்; எதிர்மறையாக வேலை பார்ப்பவர்கள் என, அனைவரது வாழ்க்கையிலும் சந்திக்கும் சமாச்சாரங்கள், இதில் இடம் பெற்றுள்ளன. வேலையில் உள்ள கடமைக்கும், வீட்டில் உள்ள கடமைக்கும் இடையே உள்ள கதையே, துாங்காவனம்.
* நடிகை த்ரிஷா பாத்திரம் எப்படி?
த்ரிஷா, என்.சி.பி., அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக வருகிறார். இப்படத்தில் வரும் பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், யூகி சேது உள்ளிட்ட பலர் அவர்களின் கதாபாத்திரமாக வருவர். இதில், யாரையும் நடிகராக பார்க்க முடியாது; கதாபாத்திரமாக தான் பார்க்க முடியும்.
* எங்கெல்லாம் படப்பிடிப்பு நடந்துள்ளது?
துாங்காவனம், தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டு வெளியாகிறது. தமிழில், சென்னையையும், தெலுங்கில், ஐதராபாத்தையும் மையப்படுத்தி படப்பிடிப்பு நடந்துள்ளது. தமிழில், நவ., 10ல், தெலுங்கில், 20ல் வெளியாகிறது.
* படத்தில் பாடல்கள் எப்படி?
இப்படத்தில் பாடல்கள் இல்லை; பாடலுக்கும் அவசியமில்லை. ஒரே நாளில் நடக்கும் கதை இது. அதனால், பாடல் தேவைப்படவில்லை. பிரமோ சாங் மட்டுமே உள்ளது; டைட்டிலில் அப்பாடல் வரும்.
* படத்தில் புதிதாக என்ன இருக்கிறது?
படத்தில், பார்க்கும் காட்சிகள் அனைத்துமே புதியது தான்; யதார்த்தம் இருக்கும். 1,500 பேருடன், கமலை வைத்து படம் இயக்கியது சவாலாக இருந்தது.
* கமல் படம் என்றாலே, முத்தக்காட்சி இருக்கும் இந்த படத்தில்...?
அதை இப்போதே கூறினால் சுவாரசியம் இருக்காது.
* கமல் படத்தில், ரொமான்ஸ், டான்ஸ் இல்லையென்றால் எப்படி?
ரசிகர்கள் எதிர்பார்க்கும் எல்லாமே, இதில் உண்டு. கமல் - த்ரிஷா இடையேயான காட்சிகளை, வேறு எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது.
* படத்தை பற்றிய ஏதாவது சிறப்பு உண்டா?
படத்தை ஆரம்பத்தில் இருந்தே பார்க்க வேண்டும்; ஒரு காட்சியை விட்டாலும் ரசிக்க முடியாது. அப்போது தான் புரியும். அனைத்து வகையிலும் மிகவும் சந்தோஷமாக எடுக்கப்பட்ட படம் இது; அனைத்தும் உண்மையாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -