வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இசை அமைப்பாளர் கங்கை அமரனின் மகனான வெங்கட்பிரபு ஆரம்பத்தில் நடிகராகத்தான் சினிமாவில் அறிமுகமானார். சிறு சிறு வேடங்களில் நடித்த அவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். என்றாலும் தன் நண்பர்களுடன் இணைந்து அவர் விளையாட்டாக எடுத்த சென்னை 28 படம் செம ஹிட்டாக கமர்ஷில் இயக்குனராகிவிட்டார். அடுத்து அவர் இயக்கிய சரோஜா, கோவா, படங்கள் சுமாராக ஓடியது. அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா மாபெரும் ஹிட் படமாக அமைந்தது. அடுத்து இயக்கிய பிரியாணியும், மாஸ் படமும் வெங்கட்பிரபுவை ஓரம்கட்டியது.
தற்போது அவர் பெரிய ஹீரோக்களுக்கான கதையை வைத்திருந்தும் யாரும் நடிக்க முன்வரவில்லை. அப்படியே ஒரு சிலர் நட்புக்காக வந்தாலும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுத்து தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் வெங்கட்பிரபு.
இதனால் தனக்கு அடையாளத்தை கொடுத்த சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் என்ன என்று யோசித்து அதற்கான ஸ்கிரிப்டை எழுத ஆரம்பித்து விட்டார். சென்னை 28ல் உருவான காமெடி கிரிக்கெட் டீம் பெரிய அளவில் வளர்ந்து விடுவதாகவும். அது பெரிய போட்டிகளில் எப்படி தந்திரமாக ஜெயிக்கிறது. அதற்கு ஏற்படும் பிரச்சினைகள் என்று கதையை நகர்த்த முடிவு செய்திருக்கிறார். தம்பி பிரேம்ஜியும், விஜய் வசந்தும், மிர்ச்சி சிவாவும் தயாராக இருக்கிறார்கள் . ஜெய்யின் தேதி மட்டும் கிடைத்து விட்டால் படத்தை ஆரம்பிக்கிற நிலையில் இருக்கிறார். விஜயலட்சுமிக்கு திருமணமாகிவிட்டதால் அதற்கு பதில் வேறொரு ஹீரோயின் நடிக்கலாம் என்கிறார்கள்.