'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
சூர்யா நடிப்பில் சிங்கம், சிங்கம்-2 படங்களை இயக்கிய ஹரி, அடுத்து சிங்கம்-3 படத்தை இயக்கப் போகிறார். விக்ரம்குமார் இயக்கத்தில் 24 படத்தில் சூர்யா இதுவரை நடித்துக்கொண்டிருந்ததால் அவருக்காக மாதக்கணக்கில் காத்திருந்தவர் இப்போது சூர்யா 24 பட வேலைகளை முழுவதுமாக முடித்துக்கொடுத்து விட்டதால், சிங்கம்-3 பட வேலைகளை தொடங்கி விட்டார். மேலும், இந்த சிங்கம்-3 படத்தின் கதை முதல் இரண்டு பாகங்களின் தொடர்ச்சிதான் என்றாலும், கதையில் பிரமாண்டம், விறுவிறுப்பு என்று ஸ்கிரிப்ட்டில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறாராம் ஹரி. அதோடு, இப்படத்தில் நடிப்பவர்கள் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முந்தைய பாகங்களில் நடித்த கேரக்டர் நடிகர் நடிகைகளை இந்த பாகத்தில் அவர் பயன்படுத்தப்போவதில்லையாம்.
அந்த வகையில், சிங்கம் படத்தின் முதல் இரண்டு பாகங்களில் நடித்தவர்கள் இந்த பாகத்தில் நடிக்க தங்களை அழைக்காதது குறித்து ஹரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த சிங்கம்-3 படத்தைப்பொறுத்தவரை முக்கியமான கேரக்டர்களை தவிர மற்ற கேரக்டர்களில் புதியவர்களையே நடிக்க வைக்கப்போகிறேன். காரணம், அப்படி அதே கலைஞர்கள் தொடர்ந்து நடித்தால் கதையில் வித்தியாசம் காட்ட முடியாது. முதல் இரண்டு பாகங்களை பார்த்த ரசிகர்களுக்கு புதிய படம பார்த்த மாதிரி இல்லாமல், பழைய படம் பார்த்த மாதிரியான உணர்வு ஏற்பட்டு விடும். அதனால்தான் கதையில் மாற்றம் செய்தது போன்று நடிகர் நடிகைகளிடம் மாற்றம் செய்கிறேன் என்று கூறி விட்டாராம்.