ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால். அதன் பிறகு முதல்முறையாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது நடிகர் சங்கம் இனி அரசியலில் ஈடுபடாது, காவிரி நதி நீர்போன்ற பொது பிரச்னைகளில் தலையிடாது என்று கூறினார்.
இதை கண்டித்து தமிழர் முன்னேற்ற படை இயக்கம் என்ற அமைப்பினர் 50 பேர் அண்ணாநகரில் உள்ள விஷால் வீட்டை நேற்று திடீரென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவரது உருவ பொம்மையையும் தீயிட்டு கொழுத்தினர். இந்த போராட்டம் குறித்து போலீசாருக்கு முன்பே தகவல் தெரிந்ததால் விஷால் வீட்டு முன் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் முற்றுகையிட்டு, உருவபொம்மை எரித்தவர்கள் விஷால் வீட்டுக்குள் புகுந்து விடாமல் இருக்க கைது செய்யப்பட்டனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும், நடிகர் சங்கம் பொதுப் பிரச்னையில் தலையிடாது என்று சொன்ன விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர். காலையில் கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நடந்தபோது விஷால் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார்.