பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் நடித்த புலி படம் சமீபத்தில் வெளிவந்தது. இதனை சிபு தமீன்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரித்திருந்தனர். இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதேவி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதற்காக அவருக்கு தற்போதுள்ள இளம் டாப் ஹீரோயின்கள் வாங்கும் சம்பளத்தை விடவும் கூடுதலான சம்பளம் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. படம் வெளிவந்துவிட்டது.
தற்போது தனக்கு பேசப்பட்ட சம்பளத்தில் இன்னும் 50 லட்சம், புலி தயாரிப்பாளர் தரவில்லை. பலமுறை கேட்டும் எந்த பதிலும் இல்லை. எனவே புலி தயாரிப்பாளரிடமிருந்து எனக்கு சேரவேண்டிய 50 லட்சத்தை பெற்றுத் தரவேண்டும் என்று ஸ்ரீதேவி மும்பை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளார். (மும்பை சங்கத்தில்தான் ஸ்ரீதேவி உறுப்பினராக உள்ளார்). இந்த புகரை மும்பை தயாரிப்பாளர் சங்கம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் புலி படத் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.