ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் பெயர் வைத்து தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும் படங்களுக்கு தமிழக அரசு வரிச்சலுகை அளித்து வருகிறது. ஆனால் இந்த வரிச்சலுகை பெற்ற படங்களுக்கும் மக்கள் மற்ற படங்களின் கட்டணத்தை கொடுத்தே பார்க்கிறார்கள். வரிச்சலுகையின் பலனை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களே எடுத்துக் கொள்வார்கள். இதை எதிர்த்து வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், வரிச்சலுகை திரைப்பட துறைக்கும், திரையரங்க உரிமையார்களுக்கு மட்டும்தான், மக்களுக்கு அல்ல என்கிற அரசின் வாதத்தை ஏற்க முடியாது. வரிச்சலுகை மக்களுக்கும் கிடைக்க வேண்டும். எனவே வரிச்சலுகை பற்றிய விபரம் கட்டணம் உள்ளிட்ட விபரங்களை டிக்கெட்டில் அச்சடித்து அதனை வணிவரித்துறையின் ஒப்புதலுடன் தியேட்டரில் விநியோகிக் வேண்டும், வரிச்சலுகை மக்களுக்கும் கிடைக்கும் வகையிலான உத்தரவை அரசு 4 வாரத்திற்குள் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனை எதிர்த்து திரையங்கு உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கை முழுமையாக விசாரித்த பிறகே எந்தவொரு உத்தரவும் பிறபிக்க முடியும். ஆகையால், ஐகோர்ட் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் கேளிக்கை வரி அளிக்கப்பட்டிருந்தால் தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டர் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கூறினர்.