ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆடுகளம் டாப்சி, தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் இடத்துக்கு வரக்கூடிய தகுதியுள்ள நடிகையாக அந்த படம் வெளியானபோது பேசப்பட்டவர். ஆனால், அதன்பிறகு அவர் நடித்த வந்தான் வென்றான் படம் தோல்வியடைந்து டாப்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது. அதனால் தமிழுக்கு ஒரு சிறிய இடைவெளி கொடுத்த டாப்சி, அதன்பிறகு ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர், லாரன்சின் காஞ்சனா-2வில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தினார். அதையடுத்து வை ராஜா வை படத்தில் ஒரு கேரக்டரில் தோன்றினார். ஆனால் காஞ்சனா-2வுக்கு பிறகு தமிழில் தனக்கு பெரிய இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த டாப்சிக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.
இருப்பினும், செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்த கான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது அவருக்கு ஒரு சிறிய நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் இப்போது அந்த படமும் கிடப்பில் கிடப்பதால் கோலிவுட் மீதான நம்பிக்கையை சுத்தமாக இழந்து விட்டார் டாப்சி. தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் அவர், தொடர்ந்து கோலிவுட் டைரக்டர்களை சந்தித்து படவேட்டை நடத்தி வருகிறார். காரணம், அவர் என்னதான் மற்ற மொழிகளிலும் நடித்தாலும் தமிழ் சினிமா டைரக்டர்கள்தான் அவருக்கு வெயிட்டான வேடம் கொடுத்துள்ளார்களாம். மற்றவர்களெல்லாம் எனது கிளாமரையே வெளிப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் தமிழ் டைரக்டர்கள் எனது திறமையை வெளிப்படுத்துகிறார்கள். அதனால்தான், தமிழ் சினிமாவை விட்டு என்னால் வெளியே முடியவில்லை என்று கூறிக்கொண்டு புதிய படங்களுக்கான முயற்சியை தொடர்ந்து வருகிறார் டாப்சி.