600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தமிழ்த் திரையுலகில் எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் முதலில் அறிமுகப்படுத்துபவர் கமல்ஹாசன். டிடிஎஸ் ஒலி தொழில்நுட்பத்தையும், டிஜிட்டல் ஒளிப்பதிவையும், ஆரோ ஒலி அமைப்பையும் இங்கு முதன் முதலில் பயன்படுத்தியவரும் அவர்தான். இப்படி வெளிநாடுகளில் வரும் மாற்றங்களை இங்கு உடனுக்குடன் கொண்டு வந்துவிடுவார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களைக் காட்டிலும் சினிமா சார்ந்த பல தொழில்நுட்ப விஷயங்களில் கமல்ஹாசனின் திறமையுடன் யாரும் போட்டி போட முடியாது என்றே சொல்வார்கள்.
நமது தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்த விரைவில் சென்னை மற்றும் ஐதராபாத்தில் சவுண்ட் ஸ்டுடியோ ஒன்றை கமல்ஹாசன் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறாராம். அதி நவீனக் கருவிகளுடன் அதை உருவாக்க உள்ளாராம். 'விஸ்வரூபம், உத்தம வில்லன், தூங்காவனம்' போன்ற படங்களின் ஒலி அமைப்பு வேலைகளை கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுதான் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு படத்திற்கும் அமெரிக்கா சென்று முடித்து வருவது அதிக செலவாகிறது என்பதால் அப்படி ஒரு ஸ்டுடியோவை இங்கேயே உருவாக்கினால் அது பலருக்கும் உதவியாக இருக்கும் என முடிவெடுத்துள்ளாராம். அதற்கான பணிகள் விரைவில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.