ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (ஐஃபா) கடந்த 15 வருடங்களாக இந்திப் படங்களுக்கென்று தனியாக விழா நடத்தி விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு முதன் முறையாக தென்னிந்திய படங்களை கவுரவிக்கும் விதமாக 3 நாள் உற்சவத்தை நடத்துகிறது. வருகிற டிசம்பர் மாதம் 4ந் தேதி தொடங்கி 6ந் தேதி வரை ஐதராபாத்தில் இந்த உற்வசம் நடக்கிறது.
முதல் நாளான 4ந் தேதி சினிமா வர்த்தகம், வளர்ச்சி பற்றிய கருத்தரங்குகள், விவாத அரங்குகள் நடக்கிறது. இரண்டாவது நாளான 5ந் தேதி தமிழ், மற்றும் மலையாள படங்களுக்கு விருதுகளும், கலைஞர்களுக்கு பாராட்டு விழாவும் நடக்கிறது. மூன்றாம் நாளான 6ந் தேதி கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கு விருதுகளும், கலைஞர்களுக்கு பாராட்டு விழாவும் நடக்கிறது. ஒவ்வொரு மொழி படங்களுக்கும் 22 பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. நடுவர்களும், இணைய தளத்தின் மூலம் ரசிகர்களும் விருதுக்கான படங்களையும், கலைஞர்களையும் தேர்வு செய்கிறார்கள்.
விழாவில் கமலஹாசன், சிரஞ்சீவி, வெங்கடேஷ், மகேஷ்பாபு, நாகார்ஜுனா, மோகன்லால், மாதவன், புனித் ராஜ்குமார், சிவராஜ்குமார் மற்றும் முன்னணி நடிகைகள், இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள். இதன் அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை துணை தலைவர் காட்ரகட்ட பிரசாத், பொதுச் செயலாளர் ரவி கொட்டாரக்கரா, நடிகர்கள் மாதவன், மோகன், நடிகைள் ஹன்சிகா, நமீதா, பூஜாகுமார், ரோகினி, சிம்ரன் மற்றும் அகாடமி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.