அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான புலமை பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி, பள்ளிக்கூடம் போகாமலே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். அடுத்து எவன் படத்தில் நடித்து வருகிறார். "சினிமாவில் நிறைய கனவுகளுடன் காத்திருக்கிறேன்" என்கிறார் மேலும் அவர் கூறியதாவது:
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் சிறு வயது கனவு. அதை தாத்தாவிடம் சொன்னபோது "சொந்தமாக படம் எடுத்து ஹீரோவாக்க எனக்கு வசதியில்லை. உதவி செய்ய எம்.ஜி.ஆரும் இல்லை. உன் திறமையை கொண்டு நீ சாதித்து காட்டு" என்றார். அதனால் முதலில் ஜிம்முக்கு சென்று உடம்மை பிட் ஆக்கினேன். சிக்ஸ் பேக் வைத்தேன். கூத்துப்பட்டறைக்கு சென்று நடிப்பு கற்றேன். நடனமும், சண்டையும் கற்றேன்.
பைக் ரேஸில் ஆர்வம் என்பதால் 2009ம் ஆண்டு பைக் ரேஸில் சாம்பியன் ஆனேன். பள்ளிக்கூடம் போகாமலே படத்தில் நெகட்டிவ் கேரக்டர் என்றாலும் துணிந்து நடித்தேன். அடுத்து தற்போது தயாராகி வரும் எவன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் என் பைக் ரேஸ் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறேன். நடிப்பில் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என்கிறார் திலீபன் புகழேந்தி.