டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது தனது கவனத்தை தமிழ் திரை உலகின் பக்கம் திருப்பியுள்ளார். கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சமந்தா தெலுங்குப் பட வாய்ப்புகளை இழக்க துவங்கியுள்ளதாக டோலிவுட் வட்டாராத்தில் கூறப்படுகின்றது. கப்பற்படை அதிகாரியாக நடிகர் ராணா நடிக்கவிருக்கும் ஹஸி எனும் வரலாற்று திரைப்படத்தில் சமந்தா நாயகியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. சமந்தாவிடமிருந்து முறையான பதில் எதுவும் வராததால் தற்போது நடிகை டாப்சி இப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தி ப்ளூ பிஷ் எனும் நாவலைத் தழுவி உருவாகும் இப்படத்தை சங்கல்ப் ரெட்டி இயக்குகின்றார். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ஹிந்தி நடிகர் ராகுல் சிங் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.