பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமிழ் சினிமாவுக்குள் ஹன்சிகா வந்தபோது, அவர் எங்கு சென்றாலும் அவரது அம்மா மோனா மோத்வானியும் கூடவே நிழல் போல் தொடர்ந்து வந்தார். அதோடு டைரக்டர்கள் கதை சொல்ல வேண்டும் என்றால் முதலில் அம்மா கேட்டு க்ரீன் சிக்னல் கொடுத்தால்தான் அடுத்த ரவுண்டில் ஹன்சிகா கதை கேட்பார். மற்றபடி கால்சீட், சம்பள விவகாரங்களை பேசும்போது ஹன்சிகா அந்த ஏரியா பக்கமே வர மாட்டார். சம்பளம் பேசும்போது அவரது அம்மாவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பெரிய வாக்குவாத சண்டையே நடக்கும். இப்படித்தான் பெரிய அக்கபோருக்கு பிறகுதான் ஹன்சிகாவை படங்களுக்கு ஒப்பந்தம் செய்து வந்தனர்.
ஆனால், சமீபகாலமாக ஹன்சிகாவின் அம்மா மும்பைக்கு பறந்து விட்டார். அண்ணன் துணையுடன் கோடம்பாக்கத்தை வளைய வருகிறார் ஹன்சிகா. ஆனபோதும், அம்மாவை கேட்காமல் எதுவும் செய்வதில்லை ஹன்சிகா. இப்போதுகூட கதை, சம்பளம் என்று வருகிறபோது மும்பையில் இருக்கும் அம்மாவுக்கு போன் போட்டு கலந்து பேசிதான் முடிவெடுக்கிறார். அந்த அளவுக்கு அம்மாவின் ஆலோசனைகளை பெரிய அளவில் மதிக்கிறார் ஹன்சிகா.
மேலும், தற்போது படவாய்ப்புகள் குறைந்து வருவதால் அடுத்தபடியாக இந்தி சினிமாவில் காலூன்றவும் ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஹன்சிகா. மும்பை பெண்ணான ஹன்சிகா இந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பதால், தென்னிந்திய சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே இந்தியிலும் ஒரு கால் பதித்து விட வேண்டும் என்று நினைக்கிறாராம். அதனால் யாராவது பாலிவுட் டைரக்டர்களை சந்திக்க வேண்டும் என்று அம்மா அழைப்பு விடுத்தால், மின்னல் வேகத்தில் மும்பைக்கு பறந்து விட்டு அடுத்த பிளைட்டை பிடித்து சென்னைக்கு வருகிறார் ஹன்சிகா.