ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த ஆகஸ்ட்டில் மோகன்லால் நடித்த 'லோஹம்' படத்தை ரிலீஸ் செய்துவிட்ட இயக்குனர் ரஞ்சித், அடுத்ததாக ஆரம்பிக்க இருப்பது நீண்ட நாட்களாகவே தான் இயக்குவதற்காக காத்திருக்கும் 'லீலா' என்கிற படத்தை தான். இது ஆர்.உன்னி என்பவர் எழுதிய 'லீலா' என்கிற நாவலை மையமாக வைத்து படமாக்கப்படுகிறது. படத்தின் திரைக்கதை வசனங்களையும் உன்னி எழுத, ரஞ்சித் டைரக்சனை மட்டும் கவனிக்கிறார்.. இந்த உன்னி தான் மம்முட்டியின் வியக்கவைக்கும் நடிப்பை கடந்த வருடம் வெளிக்கொணர்ந்த 'முன்னறியிப்பு' படத்தின் கதையையும் எழுதியவர்.
தற்போது லீலா படத்தின் நாயகனாக குட்டியப்பன் என்கிற கேரக்டரில் பிஜுமேனன் நடிக்க இருக்கிறார்.. ஆனால் இந்த கேரக்டருக்கு முதலில் மோகன்லாலைத்தான் மனதில் வைத்திருந்தார் ரஞ்சித். ஆனால் சில காரணங்களால் மோகன்லால் மறுத்துவிட, அடுத்து மம்முட்டி இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் இதுநாள்வரை பேச்சு ஓடியது.. ஆனால் இப்போது என்ன ஆனதோ தெரியவில்லை, பிஜுமேனன் நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். அதேபோல கதாநாயகியான 'லீலா' கேரக்டரில் நடிக்க முதலில் நடிகை ஆன் அகஸ்டினைத்தான் கேட்டார்களாம்.. ஆனால் சர்ச்சைக்குரிய அந்த கேரக்டரில் நடிக்க அவர் மறுத்துவிட்டதால், தற்போது ரீமா கல்லிங்கல் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.. இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.