பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் எந்த கிசுகிசுவும் வராது, ஆனால் தொடர்ந்து மூன்று படங்களில் சேர்ந்து நடித்தால் கிசுகிசு மட்டுமா வந்தது, திருமணமே நடந்து விட்டது என்ற செய்தியல்லவா வந்துவிட்டது.
நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானத்திற்கும் நாயகனாக வேண்டும் என்று ஆசை வந்தது. 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற படத்தில் தனி நாயகனாக உயர்ந்தார். இந்தப் படம் தோல்விப் படமாக அமையவே, சந்தானத்தின் நாயகன் ஆசை போய்விடும் என்று கோலிவுட்டில் எதிர்பார்த்தார்கள். ஆனாலும், 'இனிமே இப்படித்தான்' என நாயகனாக மட்டுமே நடிப்பேன் என சந்தானம் முடிவெடுத்துவிட்டார். இந்த இரண்டாவது படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இப்போது அடுத்த நாயகன் அவதாரம் எடுத்து விட்டார். தன்னை வைத்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை இயக்கிய ராம்பாலா என்பரை சந்தானம் தற்போது மறக்காமல் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது திருப்பதியில் நடந்து வருகிறது. படத்தின் நாயகன் சந்தானமும், நாயகி ஆஷ்னாவும் திருமணம் செய்து கொள்வதாக காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அதை உண்மையென்று நம்பிய சிலர் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாக வதந்தியைக் கிளப்பிவிட்டுள்னர். 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான்' படங்களுக்குப் பிறகு சந்தானத்துடன் ஆஷ்னா மூன்றாவது முறை ஜோடி சேர்ந்துள்ளார். தொடர்ந்து ஆஷ்னாவுக்கு சந்தானம் வாய்ப்புத் தரவே இப்படி ஒரு வதந்தியை கிளப்பிவிட்டுள்ளார்கள்.
மேலும் இதுப்பற்றி சந்தானம் தரப்பிடம் விசாரித்தபோது... எப்பவும் சந்தானம் தன் படத்தை ஆரம்பிக்கும் முன்னர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு தான் தொடங்குவார். இந்தப்படமும் அப்படித்தான். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. மற்றபடி சந்தானத்திற்கும், ஆஷ்னாவுக்கு திருமணம் நடந்ததாக வந்துள்ள செய்தி உண்மையில்லை என்று கூறினர்.