ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த மாதம் 30ந் தேதி பள்ளிக்கூடம் போகாமலே என்ற படம் வெளிவந்தது. இதில் தேஜஸ், ஐஸ்வர்யா ராஜா என்ற புதுமுகங்கள் நடித்திருந்தனர். கணேஷ் வெங்கட்ராம் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஜெயசீலன் என்பவர் இயக்கி இருந்தார். இதில் விளையாட்டில் ஆர்வமுள்ள ஒரு மாணவன் படிப்பில் கோட்டைவிடுவான். அவனை ஆசிரியர்களும், பெற்றோரும் அவமானப்படுத்துவார்கள். இதனால் தற்கொலை செய்ய செல்லும் அவனை ஒரு மாணவி தடுத்து அவனுக்கு நம்பிக்கையூட்டி படிக்க வைப்பார். இதுதான் படத்தின் கதை.
இப்போது இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஆவடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கல்யாணசுந்தரம் என்பவர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "பள்ளிக்கூடம் போகாமலே படத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆசிரியர்களால் மாணவர்கள் பாதிக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது உன்னதமான ஆசிரியர் பணியை கொச்சைப்டுத்துவதாகும். ஆசிரியர், மாணவர்கள் உறவை பாதிக்கும் வகையிலும் அவர்களது மரியாதையை குறைக்கும் வகையிலும் காட்சிகள் இருக்கிறது. எனவே இந்தப் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.