கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சூர்யா நடித்த படம் சூப்பர்ஹிட்டாகி பல வருடங்களாகிறது. மாற்றான், அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி என தொடர்ந்து சூர்யா நடித்த படங்கள் படுதோல்வியடைந்தநிலையில் சூர்யாவின் தற்போதைய ஒரே நம்பிக்கை 24 படம்தான். விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடிக்கும் '24' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
தமிழில் 'அலை', 'யாவரும் நலம்' ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார் தெலுங்கில் இயக்கிய 'மனம்' மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து விக்ரம் குமார் தமிழில் இயக்கும் மூன்றாவது படம் '24'. சூர்யாவின் '2டி' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்துவிட்டது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சூர்யா, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் 24 படம் விரைவில் வெள்ளித்திரைக்கும் வரவிருக்கும்நிலையில் அப்படம் குறித்து புதிய தகவல்.
தெலுங்கில் மனம் படத்தை இயக்குவதற்கு முன் தமிழில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க கமிட்டாகி இருந்தார் விக்ரம் குமார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே நடிகர் விக்ரம்- இயக்குநர் விக்ரம் இடையில் பிரச்சனை ஏற்பட்டதால் அந்தப்படம் ட்ராப்பானது. விக்ரம் நடிக்க மறுத்த அந்தக்கதைதான் தற்போது சூர்யா நடிக்க 24 என்ற படமாக வளர்ந்து வருகிறது. ஏற்கனவே சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் பனிப்போர். இந்த சூழலில் தான் நடிக்க வேண்டிய படம் சூர்யாவுக்குப்போனதில் விக்ரம் அப்செட் என்று கேள்வி.