ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
சில வருடங்களுக்கு முன் மலையாள சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் கேரள மக்களையே அதிர்ச்சியடை வைத்தது மோகன்லால், மம்முட்டி இருவர் வீட்டிலும் நடந்த வருமான வரித்துறையினரின் ரெய்டு.. மம்முட்டி வரி கட்டவேண்டிய கணக்கில் ஏற்பட்ட சில கணக்கு குளறுபடிகளால் சிக்கலை சந்தித்தார் என்றால், மோகன்லாலோ யானை தந்தங்களை வைத்திருந்தார் என்கிற அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுக்கு ஆளானார்.. ஆம் யானை தந்தங்களை அவர் வைத்திருந்தது உண்மைதான்.. ஆனால் அது அவரது நண்பர் அவரது கலைப்பொருட்கள் சேகரிக்கும் மோகன்லாலின் ஆர்வத்திற்காக அவருக்கு பரிசாக வழங்கியது.. அதை வைத்திருப்பதற்கு அரசின் லைசன்ஸும் வைத்திருந்தார் மோகன்லால்...
ஆனால் ரெய்டு நேரத்தில் அவர் அங்கே இல்லாததால் அது பெரிய பிரச்சனையாக மாறியது.. பின்னர் அந்த லைசன்ஸை காட்டி ஒருவழியாக சிக்கலில் இருந்து மீண்டுவந்தார்.. இப்போது இதேபோன்றதொரு சிக்கலில் தான் ஜெயராமும் மாட்டிக்கொண்டுள்ளார். ஆனால் இவர் விஷயத்தில் பிரச்சனை இவரை தேடிவரவில்லை.. இவராகத்தான் வலிய சிக்கலை இழுத்துக்கொண்டுள்ளார்.. சிக்கலுக்கு காரணம் சமீபத்தில் இவர் எழுதிய புத்தகம்.. அது அம்பலப்படுத்திய உண்மை.
யானைப்பிரியரான ஜெயராம் சில நாட்களுக்கு முன் யானைகளைப்பற்றி தான் எழுதிய 'ஆள்கூட்டத்தில் ஓரான பொக்கம்' என்கிற புத்தகத்தை மம்முட்டியை வைத்து வெளியிட்டார் அல்லவா.. அதில் யானைகளுடனான தனது சுவாரஸ்ய நிகழ்வுகளையும் எழுதியிருக்கிறார் ஜெயராம். அதில் இவர் மிகவும் நேசித்த ரவீந்திரன் என்கிற கோவில் யானை இறந்தபோது அதன் தந்தங்களை அதன்மீது பிரியம் வைத்த ஜெயராமிடம் கோவில் நிர்வாகம் தந்ததாம். ஆனால் சட்டப்படி கோவில் யானை இறந்துவிட்டால் அதன் தந்தங்களை வனத்துறையிடம் தான் ஒப்படைக்கவேண்டுமாம்.. அதனால் இது குறித்து ஜெயராம் மற்றும் கோவில் நிர்வாகம் மீது வனத்துறை ஐஜி வழக்கு தொடுக்க உத்தரவிட்டுள்ளார்.