Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தந்தத்திற்காக வழக்கு ; புத்தகம் எழுதி சிக்கலில் மாட்டிய ஜெயராம்..!

03 நவ, 2015 - 16:34 IST
எழுத்தின் அளவு:
Jayaram-under-pressure

சில வருடங்களுக்கு முன் மலையாள சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் கேரள மக்களையே அதிர்ச்சியடை வைத்தது மோகன்லால், மம்முட்டி இருவர் வீட்டிலும் நடந்த வருமான வரித்துறையினரின் ரெய்டு.. மம்முட்டி வரி கட்டவேண்டிய கணக்கில் ஏற்பட்ட சில கணக்கு குளறுபடிகளால் சிக்கலை சந்தித்தார் என்றால், மோகன்லாலோ யானை தந்தங்களை வைத்திருந்தார் என்கிற அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுக்கு ஆளானார்.. ஆம் யானை தந்தங்களை அவர் வைத்திருந்தது உண்மைதான்.. ஆனால் அது அவரது நண்பர் அவரது கலைப்பொருட்கள் சேகரிக்கும் மோகன்லாலின் ஆர்வத்திற்காக அவருக்கு பரிசாக வழங்கியது.. அதை வைத்திருப்பதற்கு அரசின் லைசன்ஸும் வைத்திருந்தார் மோகன்லால்...


ஆனால் ரெய்டு நேரத்தில் அவர் அங்கே இல்லாததால் அது பெரிய பிரச்சனையாக மாறியது.. பின்னர் அந்த லைசன்ஸை காட்டி ஒருவழியாக சிக்கலில் இருந்து மீண்டுவந்தார்.. இப்போது இதேபோன்றதொரு சிக்கலில் தான் ஜெயராமும் மாட்டிக்கொண்டுள்ளார். ஆனால் இவர் விஷயத்தில் பிரச்சனை இவரை தேடிவரவில்லை.. இவராகத்தான் வலிய சிக்கலை இழுத்துக்கொண்டுள்ளார்.. சிக்கலுக்கு காரணம் சமீபத்தில் இவர் எழுதிய புத்தகம்.. அது அம்பலப்படுத்திய உண்மை.


யானைப்பிரியரான ஜெயராம் சில நாட்களுக்கு முன் யானைகளைப்பற்றி தான் எழுதிய 'ஆள்கூட்டத்தில் ஓரான பொக்கம்' என்கிற புத்தகத்தை மம்முட்டியை வைத்து வெளியிட்டார் அல்லவா.. அதில் யானைகளுடனான தனது சுவாரஸ்ய நிகழ்வுகளையும் எழுதியிருக்கிறார் ஜெயராம். அதில் இவர் மிகவும் நேசித்த ரவீந்திரன் என்கிற கோவில் யானை இறந்தபோது அதன் தந்தங்களை அதன்மீது பிரியம் வைத்த ஜெயராமிடம் கோவில் நிர்வாகம் தந்ததாம். ஆனால் சட்டப்படி கோவில் யானை இறந்துவிட்டால் அதன் தந்தங்களை வனத்துறையிடம் தான் ஒப்படைக்கவேண்டுமாம்.. அதனால் இது குறித்து ஜெயராம் மற்றும் கோவில் நிர்வாகம் மீது வனத்துறை ஐஜி வழக்கு தொடுக்க உத்தரவிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in