தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் "ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு அது தொடர வேண்டும்" என்று கமல் கூறினார். பிரபல போட்டாகிராபர் ஜே.சுரேசின் ஜல்லிக்கட்டு புகைப்பட கண்காட்சியை லலித் அகாடமியில் துவக்கி வைத்து பேசியபோது கமல் இதனை குறிப்பிட்டார் நிகழ்ச்சியில அவர் மேலும் பேசியதாவது:
ஜல்லிக்கட்டை விலங்குகளை துன்புறுத்தும் விளையாட்டு என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டிலும், இத்தாலியிலும் நடப்பவை தான் விலங்குகளை துன்புறுத்தும் விளையாட்டுகள். அவைகளை நான் பார்த்திருக்கிறேன். மிருகங்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் அவை தப்பிச் செல்லும்போது கத்தியால் குத்தி கிழித்து கறி பண்ணி சாப்பிடுகிறார்கள்.
ஆனால் ஜல்லிகட்டில் மாட்டின் மீது ஆணியை கொண்டு கீறினால்கூட அவன் வீரன் கிடையாது. உண்மையில் இதற்கு பெயர் ஜல்லிக்கட்டு அல்ல ஏறு தழுவுதல். அதை தழுவி விளையாடும் விளையாட்டே தவிர கொம்பை பிடித்து வளைப்பதோ, கொலை பண்ணுவததோ இல்லை.
அமைதியான காலங்களில் இளைஞர்கள் மோதலுக்கு பயந்துவிடக்கூடாது என்பதால் அவர்களின் தசை நார்களை பதம் செய்வதற்காக மாடுகளை தழுவும் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருக்கிறது. அது தொடர வேண்டும் என்பதுதான் என்போன்ற ஏறு தழுவும் தமிழர்களின் வேண்டுகோள். தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் விளையாட்டை தடுக்க வேண்டாம். இவ்வாறு கமல் பேசினார்.