டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜீவா தற்போது நயன்தாராவுடன் திருநாள் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது முடிந்து படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. தீபாவளிக்கு டிரைலர் வெளியிடப்படுகிறது. தீபாளிக்கு பிறகு பாடல்கள் வெளியிடப்படுகிறது. படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு பிறகு போக்கிரி ராஜாவில் தற்போது நடித்து வருகிறார் ஜீவா. இதனை புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார், ஹன்சிகா மோத்வானி ஹீரோயின். சிபிராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். ராம் பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார்.
இந்தப் படத்திற்கு பிறகு ஜீவா நடிக்கும் படத்தை முத்துகுமார் என்ற புதுமுகம் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ஜெமினி கணேசன் என்று தலைப்பு வைத்துள்ளனர். இதற்காக பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் குடும்பத்தினரிடம் முறையாக அனுமதி பெற்றிருக்கிறார்கள். அவர்களும் படத்தின் கதையை கேட்ட பிறகே அனுமதியளித்திருக்கிறார்கள். விரைவில் இதன் படப்பிடிப்புகள் துவங்குகிறது.