துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
நாடகத்துறையில் இருந்து சினிமாத்துறைக்குள் வந்த நடிகர்களில் டெல்லி கணேசும் ஒருவர். தென்னிந்திய சினிமாக்களில் நூற்றுக்கணக்கான படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்திருக்கும் இவர், தற்போது தனது மகன் மகாவை, என்னுள் ஆயிரம் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்துள்ளார். அதோடு, அந்த படத்தை ஓம் கணேஷ் கிரியேசன்ஸ் சார்பில் தானே தயாரித்திருக்கிறார் டெல்லி கணேஷ்.
இந்த படத்தை ஏ.எல்.விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். கோபி சுந்தர் இசையில், நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தில் மகாவிற்கு ஜோடியாக மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள மரீனாவும், இன்னொரு நாயகியாக ஸ்ருதியாலும் நடித்துள்ளனர். இவர்களுடன் வின்சென்ட் அசோகன், சூதுகவ்வும் சிவகுமார், டெலிபோன்ராஜ், சிவாஜி, ரவிராஜ்கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான டெல்லி கணேஷ் பேசுகையில்,
என் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்றதும் நிறைய கதைகள் கேட்கத் தொடங்கினேன். அப்போது ஏ.எல்.விஜய்யிடத்தில் 6 படங்களில் பணியாற்றிய கிருஷ்ணகுமார், என் மகனை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். அது என் மகன் மகாவிற்கு பிடித்து விட என்னிடம் சொன்னார். அதையடுத்து நானும் அந்த கதையை கேட்டேன். வித்தியாசமாக இருந்ததால் அந்த படத்திலேயே என் மகனை அறிமுகம் செய்ய முடிவெடுத்தேன்.
அதையடுத்து சிலர் என் மகனை வைத்து படம் தயாரிக்க முன்வந்தனர். ஆனால், அவர்கள் வரும்போதே டைரக்டர்களுடன் வந்தனர். ஆனால் நாங்கள் முடிவு செய்து வைத்திருந்த கதையே சிறப்பாக இருந்ததால் அதை விட மனமில்லை. அதனால் இந்த படத்தை நாமே தயாரித்து விடலாம் என்று நான் தயாரிப்பாளராகி விட்டேன். இந்த கதையில் கமர்சியல் நடிகர் நடிகைகளை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் டைரக்டர் இந்த கதைக்கு அதற்கு அவசியமில்லை என்று சொன்னார். அதனால் கதைக்கு தேவையில்லாததை செய்ய வேண்டாமே என்று அவர் விருப்பம் போலவே விட்டு விட்டேன்.
மேலும், நான் ஒரு வேடத்தில் நடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் டைரக்டர் உங்களுக்கு ஏற்ற பவர்புல் கேரக்டர் இல்லை. ஹீரோவுக்கு அப்பா வேடம் உள்ளது. ஆனால் நடிப்பதற்கு பெரிய வாய்ப்புகள் இருக்காது. அதனால் உங்களை அந்த ரோலில் நடிக்க வைத்து வேஸ்ட் பண்ண விரும்பவில்லை என்று டைரக்டர் சொல்லிவிட்டார். அதுவும் சரிதான் என்று நானும் கட்டாயப்படுத்தவில்லை.
அதோடு, என் மகன் நடித்ததை ஒரேயொரு நாள் ஸ்பாட்டுக்கு சென்று பார்த் தேன். சிறப்பாக நடித்துக்கொண்டிருந்தார். புதுமுக நடிகர் போன்றே தெரியவில்லை. அதனால் இந்த படத்தில் என் மகனின் நடிப்பும், இந்த படமும் பேசப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் மரீனா. இவர் மலையாளத்தில் சில படங்களில் நடித்திருப்பவர். அவருக்கு நான் பெரிதாக தங்கும் வசதி எதுவும் செய்து தரவில்லை. என் வீட்டில் உள்ள கெஸ்ட்ஹவுசில் அவரது அம்மாவோடு தங்க வைத்தேன். ரொம்ப நல்ல பெண். இயல்பாக நடித்தார். கடைசி நாள் செல்லும்போது, என்னையும், எனது மனைவியையும் நிற்க வைத்து காலில் விழுந்து வணங்கி விட்டு சென்றார். அவ்வளவு மரியாதையான நடிகை என்றார் டெல்லி கணேஷ்.