தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கார் விபத்து தொடர்பாக என் மீதுள்ள வழக்கில், என்ன தீர்ப்பு வருமோ என பீதியாக உள்ளது. என் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது, என, பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார். நடிகர் சல்மான் கான், 49, 2002ல்,மும்பையில், நடைபாதையில் தூங்கியவர்கள் மீது, காரை மோதி, விபத்தை ஏற்படுத்தினார். இதில், ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில், மும்பை கோர்ட், சல்மான் கானுக்கு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஜாமின் பெற்ற சல்மான், தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், சல்மான் கான் அளித்த பேட்டி: நான், திரைப்படங்களில் நடிப்பதால் ஜாலியாக இருப்பதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால், என் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. கார் விபத்து வழக்கில், என்ன தண்டனை விதிக்கப்படுமோ என, பதறுகிறேன். என்னை விட, என் பெற்றோர் அதிகம் பயப்படுகின்றனர். எனக்கு நல்ல தீர்ப்பு வர வேண்டும் என, பலரும் பிரார்த்திக்கின்றனர்; நானும் பிரார்த்திக்கிறேன். எனக்கும் பிரார்த்தனைகளில்நம்பிக்கை உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.