அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ்சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்த அம்பிகா தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். ஏற்கனவே சிறுகதை, கவிதைகளை பல புத்தகங்களுக்கு எழுதிய அனுபவம் அம்பிகாவுக்கு உண்டு. அந்த அனுபவத்தை வைத்து தனது தம்பி சுரேஷூடன் இணைந்து இப்படத்தை இயக்குகிறார் அம்பிகா.
சுரேஷ் அமெரிக்க பிலிம் இன்ஸ்டியூட்டில் 2000ல் மாணவர். அந்த அனுபவத்தோடு படத்தை இயக்கி, ஒரு புதுமைக்கு முயற்சி செய்துள்ளார். அதாவது சினிமாவில் வழக்கமாக கேமராமேன் உண்டு. ஆனால் இந்த படத்தில் கேமராமேன் கிடையாது. அதற்குபதிலாக படத்தில் நடிப்பவர்களே கேமராவை கையில் எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார்கள். இதற்காக ஹெஜ்.டி., கேமராவை பயன்படுத்தி இருக்கிறார்கள். அனபெல்லா படத்தில் மிஸ் கேரளா 2010ல் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துதம்பி கதாநாயகியாக நடித்து அசத்தியிருக்கிறார். இந்த படம் முற்றிலும், நியூ ஜெனரேஷன் பிலிமாக அமையும் என்கின்றனர் இந்த புதிய இயக்குநர்கள். ஜீன் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.