விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
கோலி சோடா என்ற ஹிட் படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன். முற்றிலும் சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த சின்ன பட்ஜெட் படம் வெற்றி பெற்ற மெகா படம் ஆனது. அதனால் அந்தப் படத்தைப்பார்த்த பலரும் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டனர். அவர்களில் விக்ரமும் ஒருவர். கோலிசோடா படத்தை பார்த்த அன்று இரவே விஜய்மில்டனுக்கு போன் போட்டு பாராட்டியிருக்கிறார். அதோடு, எனக்கு பொருந்தக்கூடிய கதைகள் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் பத்து எண்றதுக்குள்ள படக்கதையை சொல்லியிருக்கிறார் விஜய்மில்டன். விக்ரமுக்கும் அந்த கதை பிடித்திருக்கிறது.
விளைவு, கோலிசோடாவைப் பார்த்து விட்டு எனது கம்பெனிக்கு ஒரு படம் இயக்குங்கள் என்று ஏ.ஆர்.முருகதாசும் விஜய் மில்டனிடம் ஏற்கனவே கூறியிருந்ததால், விக்ரமை அவர் கம்பெனியுடன் இணைத்து பத்து எண்றதுக்குள்ள படத்தை இயக்கினார் விஜய்மில்டன். ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றிபெறவில்லை. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில், இப்போது பேமிலியுடன் வெளிநாடு சென்று ரிலாக்ஸ் செய்து கொண்டிருக்கிறார் விக்ரம்.
இந்த நிலையில், பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்தபோதே மீண்டும் விஜய்மில்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் அடுத்து நடிக்கயிருப்பதாக கூறி வந்த விக்ரம், இப்போது அதை மறுத்துள்ளார். அவருக்கு கொடுக்கயிருந்த கால்சீட்டை சசிகுமாரை வைத்து பிரம்மா படத்தை இயக்கிய சாக்ரடீஸ்க்கு கொடுத்துள்ளாராம். அடுத்தபடியாக அரிமா நம்பி ஆனந்த் ஷங்கர் இயக்கும் மர்ம மனிதன் படத்தில் நடித்து விட்டு சாக்ரடீஸ் படத்தில் விக்ரம் நடிப்பார் என்று தெரிகிறது.