விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
விமல்-ஓவியா நடித்த களவாணி படத்தை இயக்கியவர் சற்குணம். அதையடுத்து வாகை சூடவா என்ற தேசிய விருது படத்தை இயக்கினார். அதனால் அதன்பிறகு அவர் மீது எதிர்பார்ப்புகள் அதிகமானது. ஆனால் அந்த படத்தைத் தொடர்ந்து தனுஷை நாயகனாக வைத்து சற்குணம் இயக்கிய நய்யாண்டி படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது.
அதோடு, காமெடி கலந்த காதல் கதையில் உருவான அந்த படத்தில் நாயகியாக நடித்த நஸ்ரியா தொப்புள் காட்டி நடிக்க மறுத்ததால், ஒரு டூப் நடிகையை அந்த காட்சிக்கு பயன்படுத்தியிருந்தார் சற்குணம். அந்த விசயம் படம் திரைக்கு வருவதற்கு முன்பே நஸ்ரியாவுக்கு தெரிய வர, கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளித்தார். அதையடுத்து தனுசுடன் நஸ்ரியா இடம்பெற்ற பாடல்காட்சியில் இருந்து அந்த டூப் தொப்புள் காட்சி நீக்கப்பட்டு படம் வெளியானது.
பின்னர், அதர்வா நடிப்பில் சண்டிவீரன் படத்தை இயக்கினார் சற்குணம். அந்த படத்தை இயக்கும்போது இப்படம் இன்னொரு களவாணி என்று சொல்லி வந்தார். ஆனால் படம் களவாணி அளவுக்கு ஓடவில்லை. இந்த நிலையில், அடுத்த பட வேலைகளில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டுள்ளார் சற்குணம். இந்த படமும் கிராமத்து கதையில்தான் உருவாகிறதாம். ஆனால், அந்த கதையில் அவரது முதல் இரண்டு படங்களிலும் நடித்த விமல் நாயகனாக நடிக்கயிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
ஆனால், இப்போது அதுபற்றி விசாரித்தால், தனது புதிய படத்தில் எந்த நடிகரை நடிக்க வைக்கலாம் என்பது பற்றி சற்குணம் இன்னும் முடிவே எடுக்கவில்லையாம். மொத்த ஸ்கிரிப்ட் வேலைகளும் முடிந்து விட்ட நிலையில், எந்த நடிகர் நடிகையை புதிய படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற பரிசீலணையில் தற்போது அவர் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்கள்.