பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ் சினிமாவில் டைரக்டர் மகேந்திரனுக்கு ஒரு தனி இடம் உண்டு. அவரை விட அதிகப்படியான படங்களை இயக்கிய எத்தனையோ டைரக்டர்கள் இருந்தபோதும், மகேந்திரன் இடத்தை மட்டுமே இதுவரை யாராலும் தொட முடியவில்லை. அந்த அளவுக்கு அவர் இயக்கிய முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி போன்ற படங்கள் இன்றுவரை பேசப்பட்டு வருகின்றன. அவருடைய இந்த படங்களைப் பார்த்தே வளரும் இயக்குனர்கள் ஸ்கிரிப்ட் எழுதும் தகுதியை வளர்த்துக்கொள்கின்றனர்.
இப்படி காலத்தால் அழியாத காவியங்களை கொடுத்த இயக்குனர் மகேந்திரன் சாசனம் படத்திற்கு பிறகு படம் இயக்கவில்லை. ஆனால் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 59வது படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதற்கு முன்பு 2004ல் காமராஜ் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த மகேந்திரன், விஜய் படத்தில் மெகா வில்லனாக நடித்து வருகிறார். மேலும், அட்லி வளர்ந்து வரும் இயக்குனராக இருந்தபோதும் அவர் சொல்லும் கருத்துக்களை கேட்டு, தன்பங்குக்கும் காட்சிகளுக்கு தேவையான சில விசயங்களை கலந்து நடிக்கிறாராம்.
அந்த வகையில், டைரக்டர் மகேந்திரன் நடிக்கும் காட்சிகள் மிரட்டலாக படமாக்கப்பட்டு வருகிறதாம். விஜய் காம்பினேசனில் அவர் நடிக்கும் காட்சிகளைப்பார்த்து சில இடங்களில் மிரண்டு போகும் விஜய், சுற்றி நிற்பவர்கள் கைதட்டு வதற்கு முன்பாக தான் கைதட்டி தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்துகிறாராம். அதனால் இப்போது விஜய்யிடமும், அப்பட யூனிட்டிடமும் கைதட்டல் பெறும் மகேந்திரனின் வில்லன் நடிப்பு, தியேட்டருக்கு வரும்போது ரசிகர்களிடமிருந்து பெரிய அளவில் கைதட்டலை பெறும் என்கிறார்கள்.