மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
நடிகர் வருண் தேஜ் அண்மையில் வெளிவந்த கஞ்சே படத்தின் வாயிலாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார். இரண்டாம் உலகப் போரை மையப்படுத்தி கஞ்சே படத்தில் வருண் தேஜின் நடிப்பும் வசன உச்சரிப்புகளும் அவருக்கு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்று தந்தன. வருண் தேஜ் நடித்த முகுந்தா திரைப்படம் சுமாரான வசூலையே பெற்றது. ஆனால் அப்படத்திற்கு பின்னர் வெளிவந்த கஞ்சே திரைப்படம் எதிர்பார்த்தற்கும் அதிக வசூலை ஈட்டியுள்ளது. இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் மா அம்மா மகாலக்ஷ்மி எனும் படத்தில் வருண் தேஜ் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 18 ஆம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகின்றது. நடிகை திஷா வருண் தேஜிற்கு ஜோடியாக நடித்து வரும் இப்படத்தில் நடிகை ரேவதி, நடிகர் பிரம்மானந்தம் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். லோபர் என பெயரிடப்பட்ட இப்படத்தின் தலைப்பை தற்போது மா அம்மா மகாலக்ஷ்மி என படக்குழுவினர் மாற்றியுள்ளதாகக் கூறப்படுகின்றது.பூரி ஜெகன்நாத்தின் படத்தை முடித்த பின்னர் காமெடி பட இயக்குனர் வீரு பொட்டல இயக்கும் படத்தில் வருண் நடிக்கவுள்ளாராம்.