டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி பெற்று நிர்வாகத்தை பிடித்தனர். நடிகர் சங்கம் தொடர்பான ஆவணங்கள், ஒப்பந்த நகல்கள், உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள், சங்க வரவுசெலவு பற்றிய விபரங்கள் அனைத்தும் சரத்குமார் வசம் இருந்தது. இதனை எப்படி வாங்குவது என்ற தயக்கத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் வேல்ஸ் பல்கலைகழகத்தின் இணை வேந்தரும், நடிகர் ஐசரி வேலன் மகனுமான ஐசரி கணேஷ் நடிகர் சங்க புதிய நிர்வாகிகளையும், சரத்குமாரையும் ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்திக்க வைத்தார். கதகளி படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் செயலாளர் விஷாலும், துணை தலைவர் கருணாசும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, சரத்குமார் நடிகர் சங்கம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் புதிய தலைவர் நாசரிடம் ஒப்படைத்தார். நாசரும் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார். சங்கம் தொடர்பான எந்த சந்தேகமாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்கலாம் என்றும் மீடியாக்கள் மூலம் கேட்க வேண்டாம் என்றும், குறிப்பாக பூச்சி முருகன், எஸ்.வி.சேகர் போன்றவர்கள் மீடியாக்கள் மூலம் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சரத்குமார் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு புதிய நிர்வாகம் ஒப்புக் கொண்டதாவும் கூறப்படுகிறது.