மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாகுபலி, ருத்ரம்மாதேவி போன்ற சரித்திர படங்களைத் தொடர்ந்து அனுஷ்கா லீடு ரோலில் நடித்திருக்கும் இன்னொரு படம் இஞ்சி இடுப்பழகி. இப்படம் தெலுங்கில் ஜீரோ சைஸ் என்ற பெயரில் தயாராகியுள்ளது. இந்த படத்திற்காக ஒல்லி, குண்டு என இரண்டு விதமான கெட்டப்பில் நடித்திருக்கிறார் அனுஷ்கா. கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கத்தில் பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அனுஷ்காவுடன் ஆர்யா, சோனல், ஊர்வசி, மாஸ்டர்பரத், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மரகதமணி இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் சங்கத்தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, ஞானவேல்ராஜா, ஏ.எல்.அழகப்பன், தனஞ்செயன், ஜெயம்ராஜா, மரகதமணி, மதன் கார்க்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது நாசர் பேசுகையில், நடிகர் சங்க தலைவர் ஆன பிறகு நான் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி இது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் நான் நடிகர் சங்க தலைவர் என்கிற முறையில் கலந்து கொள்ளவில்லை. எனது மகள் அனுஷ்கா நடித்துள்ள படம் என்பதற்காக கலந்து கொண்டுள்ளேன். அனுஷ்காவை நான் மகளாக தத்தெடுத்திருக்கிறேன். இது யாருக்கும் தெரியாது.
மேலும், இந்த படத்தின் கதையை கேட்டதும் அவர் அந்த கதை பற்றி என்னிடம் சொன்னார். அப்போது நான் கமல் சார் தனது படங்களுக்கு பயன்படுத்தும் ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை பயன்படுத்திக்கொள்ள சொன்னேன். ஆனால் அவரோ அது வேண்டாம். எனது மேக்கப்மேன்களே நல்ல திறமையானவர்கள்தான். அவர்களையே பயன்படுத்திக்கொள்கிறேன். அதோடு, இந்த கதாபாத்திரத்தை சவாலாக ஏற்று செய்யப்போகிறேன் என்றார். தொழில் மீது பெரிய பக்தி வைத்திருக்கும் அனுஷ்கா, உழைப்பதற்கு தயங்காதவர். அவரது கடின உழைப்பு இந்த படத்தின் ட்ரெய்லரில் தெரிகிறது என்றார்.
டைரக்டர் ஜெயம் ராஜா பேசும்போது- அனுஷ்காவின் உழைப்பு ட்ரெய்லர், பாடல்களில் தெரிகிறது. ஒரே படத்தில் இரண்டுவிதமான கெட்டப்பில் பெரும்பாலும் நடிகர்கள்தான் நடிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அதை அனுஷ்கா செய்திருக்கிறர். ஒல்லி, குண்டு என இரண்டு விதமாக தனது உடல்கட்டை மாற்றி நடித்திருக்கிறார். அந்த வகையில், கமல், விக்ரம் என்ற இரண்டு மாபெரும் நடிகர்கள் கலந்த கலவை போன்று தெரிகிறார் அனுஷ்கா. இந்த படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கையில் நான் படித்த காலத்தில் கே.பாக்யராஜ் சாரின் சின்னவீடு படத்தை பார்த்த ஞாபகம் வருகிறது.
ஞானவேல்ராஜா பேசுகையில், இந்த படத்தின் இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் மரகதமணி அவர்கள். அவரது இசையில் வெளியான பாகுபலி படத்தை எங்களது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டது. அந்த படம் கடந்த ஞாயிறு அன்று கூட ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. அப்படத்திற்கு அருமையான பின்னணி இசையை கொடுத்திருந்தார். அதற்கு துளியும் குறையாக இசையை இந்த இஞ்சி இடுப்பழகி படத்திற்காகவும் அவர் கொடுத்திருக்கிறார். இளையராஜாவுக்கு இணையான ஒரு இசையமைப்பாளர் மரகதமணி.
இந்த படத்தின் இயக்குனரைப்பற்றி அவர் பிராமிஸிங் டைரக்டராக வருவார் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார் சூர்யா. அதேபோல் அனுஷ்கா எதையும் சவாலாக ஏற்று நடிக்கக்கூடியவர். ஆர்யா தனக்கே முக்கியத்துவம் வேண்டும் என்று சொல்லாமல் விட்டுக்கொடுத்து நடிக்கக்கூடியவர். தொடர்ந்து ஹீரோயிசம் கொண்ட கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லாமல், இந்த மாதிரி ஹீரோயினிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளிலும் ஹீரோக்கள் நடிக்க வேண்டும். அப்போதுதான் வித்தியாசமான கதைகளில் உருவாகும் படங்கள் வெளியாகும்.
அனுஷ்கா பேசுகையில், இந்த படத்தோட ஸ்டோரியை கேட்டபோது ஒரு நடிகையாக நான் கேட்கல. ஒரு நார்மல் பொண்ணாகத்தான் கேட்டேன். அந்த மாதிரி எனக்குள்ள அந்த கதை கனெக்ட் ஆச்சு. இந்த ஜெனரேசன்ல எல்லோருக்குமே குண்டு பொண்ணை விட ஒல்லி பொண்ணுதான் புடிக்குது. ஆனா இந்த படத்தைப்பார்த்தால் அதுல ஒரு மாற்றம் ஏற்படும். அதோட குண்டா இருந்தாலும் நான் அழகாவே இருப்பேன். குண்டும் அழகு அப்படிங்கிற மாதிரி ஸ்கிரிப்ட் போகும்.
குண்டா இருக்கிற பொண்ணுங்களோட மனசில இருக்கிற பீல்ல கொண்டு வந்திருக்கேன். அதே மாதிரி ரொமான்ஸ் காட்சிகளும் சூப்பரா இருக்கும். டைரக்டர் பிரகாசோட கதையில நடிச்சது ரொம்ப நல்ல எக்ஸ்பீரியன்ஸ்.ஹீரோயினை அழகா காட்ட நினைக்காம குண்டா காட்ட நினைச்சதே பெரிய விசயம். அந்த அளவுக்கு அவர் கதை மேல நம்பிக்கை வச்சிருக்காரு. அந்த கதையை நம்பி நாங்களும் நடிச்சிருக்கோம். கண்டிப்பா ரசிகர்களுக்கு இஞ்சி இடுப்பழகி பிடிக்கும் என்றார்.
ஆர்யா பேசும்போது, இந்த படத்துக்கு லெஜன்ட் இசையமைப்பாளர் மரகதமணி சார் இசையமைத்திருப்பதே பெரிய பலம். பாகுபலிக்கு இணையான இசையை இந்த படத்திற்கும் அவர் கொடுத்திருக்கிறார். இந்த படத்துக்கு நாசர் வந்தது ஸ்பெசல்தான். சினிமா பீல்டுல தலைவருன்னு நாங்க ரஜினி சாரதான் சொல்வோம். இப்ப தலைவர் வாராருன்னு மத்தவங்க சொன்னபோது நான் எந்த தலைவருன்னு கேட்டேன். இந்த படத்துல எனக்கு ஈஸியான ரோல்தான். ஆனா அனுஷ்காதான் ரொம்ப எபோர்ட் போட்டு நடிச்சாங்க. வெயிட் போட்டாங்க. குறைச்சங்க. இது இல்லாமல் இந்த படத்துக்காக அவங்களோட உழைப்பு ரொம்ப ஜாஸ்தியா இருந்தது. அவ்ளோ வெயிட் போட்டு நடிச்சிட்டு. இன்றைக்கு ஆடியோ பங்சன்ல வெயிட்டை குறைச்சிட்டு வந்து இருக்கிறது அவ்ளோ சாதாரணமான விசயமல்ல. இப்படியொரு ப்ராஜக்ட்ல நான் ஒர்க் பண்ணினதை சந்தோசமா நினைக்கிறேன் என்றார் ஆர்யா.