இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'சார்லி' படப்பிடிப்பை முடித்துவிட்ட துல்கர் சல்மான், தற்போது ராஜீவ் ரவி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்... இதை முடித்ததும் சமீர் தாஹிருன் மீண்டு கூட்டணி அமைத்துள்ள படத்திற்காக நவம்பரில் ஷூட்டிங் கிளம்புகிறார். அடுத்து மணிரத்னம் படத்திற்காக கொடுத்த கால்ஷீட்டைத்தான் இயக்குனர் அமல் நீரத்திற்கு கொடுத்துள்ளார் துல்கர். ஆம்.. மம்முட்டியை வைத்து 'பிக் பி' படம் மூலம் இயக்குனராக மாறிய அமல் நீரத், இப்போது துல்கர் சல்மானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போகிறார்.
ஏற்கனவே 'அஞ்சு சுந்தரிகள்' என்கிற ஆந்தாலாஜி படத்தின் (குறும்படங்களை ஒருங்கிணைத்த படம்) ஐந்து எபிசோடுகளில் 'குள்ளண்டே பார்யா' என்கிற குறும்படத்தில் துல்கரை வைத்து இயக்கியிருந்தார் அமல் நீரத். இப்போது முழு நீளப்படமாகவே இயக்கவுள்ளார். இந்தப்படத்தில் துல்கர் சல்மான் டான்சராக நடிக்க இருக்கிறார் அமல் நீரத் மலையாள சினிமாவில் அருமையான ஒரு ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, திறமையான இயக்குனரும் கூட. அதனால் தான் மலையாளத்தில் நடிக்கலாமா என்று யோசித்த பிரகாஷ்ராஜே கூட இவர் இயக்கிய 'அன்வர்' படத்தில் நடித்துக்கொடுத்தார். சில மாதங்களுக்கு முன் இவர் இயக்கத்தில் வெளியான 'அயூப்பிண்டே புஸ்தகம்' பாசிடிவ் விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.