வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பசங்க புரடக்ஷன்ஸ் சார்பில் பாண்டிராஜ் லைன் புரட்யூசராக தயாரித்து இயக்கி உள்ள படம் பசங்க-2. ஹைக்கூ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு தற்போது பசங்க-2 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்நிலையில் பசங்க-2 படத்துக்கு தடைவிதிக்கும்படி வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார் மதுராஜ் என்ற தயாரிப்பாளர்.
இவர் பாபிசிம்ஹாவை வைத்து 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்ற படத்தைத் தயாரித்தவர். அது மட்டுமல்ல, ஒரு காலத்தில் பாண்டிராஜின் நண்பர்ராகவும் இருந்தவராம். அப்புறம் ஏன் இப்போது வழக்கு தொடரப்போகிறார்? சில வருடங்களுக்கு முன் பாண்டிராஜ் மெரீனா படத்தை எடுத்தபோது, அந்தப் படத்தின் கேரளா தியேட்டரிகல் ரைட்ஸ் மற்றும் மெரீனா படத்தின் மலையாள டப்பிங் ரைட்ஸ் ஆகிய இரண்டையும் 2.5 லட்சம் ரூபாய்க்கு மதுராஜிடம் விற்பனை செய்துள்ளார் பாண்டிராஜ்.
பணம் கைமாறிய பிறகு இந்த வியாபாரத்தை உறுதி செய்து தன் லெட்டர்பேடில் எழுதிக்கொடுத்திருக்கிறார் பாண்டிராஜ். ஆனால் மறுநாள் போடப்பட்ட அக்ரிமெண்ட்டில், முந்தையநாள் லெட்டர்பேடில் எழுதிக்கொடுத்ததற்கு மாறாக வெறும் மலையாள டப்பிங் ரைட்ஸ் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது மெரீனா படத்தின் கேரளா தியேட்டரிகல் ரைட்ஸ் அதில் குறிப்பிடப்படவில்லை. இந்த வியாபாரமே வேண்டாம் என்று சொன்னதோடு அக்ரிமெண்ட்டை உடனே கேன்சல் பண்ணும்படி சொல்லிவிட்டு தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டிருக்கிறார் மதுராஜ். இன்று நாளை என இழுத்தடித்த பாண்டிராஜ் இதுவரை பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லையாம். எனவே அடுத்த கட்டமாக பாண்டிராஜ் தற்போது இயக்கி வரும் பசங்க-2 படத்துக்கு தடை கேட்டு வழக்குத் தொடர இருக்கிறாராம்.
பசங்க-2 படத்தின் உண்மையான தயாரிப்பாளர் சூர்யா என்றாலும், ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் அந்தப் படத்தைத் தயாரித்தது பாண்டிராஜின் பசங்க புரடக்ஷன்ஸ்தான்.
எனவே மதுராஜ் வழக்கு தொடர்ந்தால் பாண்டிராஜுக்கு சிக்கல் வர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் சட்டவல்லுனர்கள்.