தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
போடா போடி படத்தை அடுத்து பல ஆண்டுகளாக புதிய படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் விக்னேஷ்சிவன். அந்த காலகட்டத்தில் இசையமைப்பாளர் அனிருத்தைதான் நானும் ரவுடிதான் படத்தில் ஹீரோவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் ஆரம்பத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து வந்த அனிருத், பின்னர் சினிமாவில் நடித்தால் இசையமைப்பதில் போதிய கவனம் செலுத்த முடியாது என்று பின்வாங்கினர். அதையடுத்துதான் அந்த படத்தை தயாரிக்கயிருந்த தனுஷ் கேட்டுக்கொண்டதற்கிணங்க விஜயசேதுபதி நடித்தார். நயன்தாரா நாயகியாக நடித்த அப்படம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதையடுத்து, நானும் ரவுடிதான் படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் அதேவேளையில், திருப்பதி உள்ளிட்ட சில முக்கிய கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார் விக்னேஷ்சிவன்.
இந்தநிலையில், அந்த படத்தை அவர் இயக்கி வந்தபோது நயன்தாராவுடன் அவருக்கு காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. பின்னர் அவர்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டதாககூட இன்னொரு செய்தி பரவியது. ஆனால் அதுபற்றி விக்னேஷ்சிவனைக் கேட்டால், நயன்தாராவுக்கும், எனக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றிருப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை. மேலும், அந்த படத்தில் நடித்தபோது எல்லோரையும் போலதான் அவருடனும் நண்பராக பழகினேன். இப்போதும் நட்பு தொடர்கிறது.
மற்றபடி, முதல் படத்தில் எனக்கு கிடைக்காத வெற்றி. இரண்டாவது படத்தில் கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் எனது அடுத்தடுத்த படங்கள் இருக்க வேண்டும் என்று கதை விவாதங்களை தொடங்கி விட்டேன். எனது அடுத்த படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்கிறார்.