மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
2001ல் சந்தோஷ்சிவன் இயக்கிய படம் அசோகா. இந்தியில் உருவான இப்படத்தில் ஷாரூக்கான், கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். சரித்திர கதையில் உருவான இந்த படத்தில் அஜீத்தும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதனால் அப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட்டனர். ஆனால் அதன்பிறகு எந்த சரித்திர படத்திலும் அஜீத் நடிக்கவில்லை.
இந்தநிலையில், வேதாளம் படத்தை அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் சரித்திர கதையில் அஜீத் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து விஷ்ணுவர்தன் கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாறு கதையில் இந்த படம் தயாராகிறதாம்.
ஏற்கனவே 1973ல் ராஜராஜசோழன் படத்தில் சிவாஜிகணேசன் நடித்திருந்தார். அதன்பிறகு ராஜராஜசோழன் கதையை யாரும் படமாக்கவில்லை. சமீபத்தில் பாகுபலி, புலி, ருத்ரமா தேவி என சரித்திர கதைகளில் படங்கள் வந்து கொண்டிருப்பதை அடுத்து அஜீத்திற்கும் அந்த மாதிரி கதைகளில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் கதையில் முக்கியத்துவம் வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலின் முக்கிய வரலாறும் இடம்பெறுகிறதாம். அதனால் அந்த கோயில் பற்றிய தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறதாம்.
அதேசமயம், புறம்போக்கு படத்தை இயக்கி விட்டு, அடுத்து தஞ்சை பெரிய கோயிலை மையப்படுத்தி ஒரு படம் இயக்கப்போவதாக கூறி வரும் எஸ்.பி.ஜனநாதன், விஷ்ணுவர்தனின் இந்த கதை விவாதம் குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்துள்ளாராம்.