ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த மாதம் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் படம் முழுவதும் வரும் நெகட்டிவான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் லைம்லைட்டிற்கு வந்துள்ளார் 'அன்பு' பாலா.. பிருத்விராஜுடன் இவர் நடித்துள்ள மூன்றாவது படம் இது.. அதுமட்டுமல்ல ஒன்றரை வருட இடைவெளிவிட்டு அவர் நடித்துள்ள படம் இது.. இதைத்தவிர மோகன்லாலுடன் மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்து 'புலி முருகன்' படத்தில் நடித்து வருகிறார்.. 'அலெக்சாண்டர் தி கிரேட்', 'சாகர் இலியாஸ் ஜாக்கி' ஆகிய பாங்களை தொடர்ந்து மோகன்லாலுடன் பாலா இணைந்து நடிக்கும் மூன்றாவது படமும் கூட. பல வருடங்களுக்கு முன்னாடியே மலையாள சினிமா பக்கம் சென்ற பாலா, 2012 வரை வருடத்திற்கு நான்கு படங்களுக்கு குறையாமல் நடித்துவந்தார். தற்போது எதனால் இந்த இடைவெளி விட்டார் பாலா..?
“கடந்த ஒரு வருட காலமாகவே என்னை தேடிவந்த படங்கள் எல்லாம் சின்ன பட்ஜெட் படங்கள் தான்.. ஆனால் இனிமேல் பெரிய படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்து அவற்றை தவிர்த்து வந்த நேரத்தில் தான் தமிழில் 'வீரம்' பட வாய்ப்பு வந்தது.. அது 60கோடி ரூபாய் பட்ஜெட் படம். சமீபத்தில் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' 12கோடி பட்ஜெட்.. அதுமட்டுமல்ல ரசிகர்களிடம் என் கேரக்டர் நன்றாகவும் ரீச் ஆகியிருக்கிறது. தற்போது மோகன்லாலுடன் இணைந்து நடித்துவரும் புலிமுருகன்' படமோ மலையாள சினிமாவிலேயே இதுவரை இல்லாத அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது” என்கிறார் இந்த 'பட்ஜெட்' பாலா. எப்படியோ ஒருவகையில் மீண்டும் தனது கேரியரில் பிக்கப் ஆகிறார் பாலா.