இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ஹீரோ, தயாரிப்பாளர் என்று உயர்ந்து இப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவராகியிருக்கிறார் நடிகர் கருணாஸ். சிலதினங்களுக்கு முன்னர் கருணாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. அப்படி என்ன சொன்னார் கருணாஸ்...? அதாவது, "நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால், அஜித்தை அழைப்பதில்லை,எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாது" என்ற கருத்து வெளியிடப்பட்டது. இக்கருத்தால் பெரும் சர்ச்சை நிலவியது. அதோடு கருணாஸை வலைபக்கத்தில் அஜித்தின் ரசிகர்கள் சரமாரியாக வசைபாடினர்.
இந்நிலையில் தான் அப்படி ஒரு கருத்தை கூறவே இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார் கருணாஸ். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... என்னுடைய டுவிட்டர் கணக்கில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளை கூறியதாக இன்று செய்தி வெளிவந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.
யாரோ விஷமிகள் என்னுடைய டுவிட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். ஆரம்ப காலகட்டம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி வந்துகொண்டிருக்கிறேன்.
யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ, காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்த்தை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது பற்றி கமிஷ்னரிடம் முறையாக புகார் அளிக்கவுள்ளேன். என்னை பற்றிய தவறான செய்திகளை கேள்விபடும் போது அந்த செய்தியை பிரசுரிக்கும் முன் எனக்கு தெரியபடுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு கருணாஸ் கூறியுள்ளார்.