கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உற்சாகமாக சுற்றுப்பயணம் செய்த காமெடி நடிகர் வடிவேலுவுக்கு முதல் அடி விழுந்திருப்பதாக கோடம்பாக்கமே சூடாக பேசிக் கொண்டிருக்கிறது. ஆம்! இப்போதைக்கு எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் வடிவேலு, தேர்தல் முடிவு வருவதற்குள் ஒரு படத்தில் நடித்து முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார். இதற்காக விஷால் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு, அப்படத்தின் டைரக்டரான நடிகர் பிரபுதேவாவுக்கு போன் அடித்திருக்கிறார் வைகைப் புயல். எதிர் முனையில் இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லையாம்.
தேர்தல் நேரத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று சக நடிகரை, அதுவும் தனக்கு வாய்ப்பு கொடுத்த நடிகரையே மகா கேவலமாக பேசிய வடிவேலுவுக்கு இப்போது விழுந்திருப்பது முதல் அடிதான். மே 13ம் தேதிக்குப் பிறகு இன்னும் நிறைய அடி வாங்குவார் என்று ஆரூடம் கணிக்கிறார்கள் கேப்டனுக்கு வேண்டப்பட்ட கோடம்பாக்கத்துக்காரர்கள். வடிவேலு பிரசாரம் செய்யப்போன இடங்களில் எல்லாம் எக்கச்சக்க கூட்டம் கூடி வரவேற்றதையும், வடிவேலுவின் எதார்த்த பேச்சை கேட்க கூடியிருந்த கூட்டத்தை பார்த்தும் பெருமைப்பட்ட வைகைப்புயலின் ஆதரவாளர்கள் இப்போதைக்கு கப்-சிப்பாக இருக்கிறார்கள்.
பணத்துக்கு பஞ்சமில்லை என்றாலும் தொழிலுக்கு போகவில்லையென்றால் தூங்கு மூஞ்சி ஆவதைத் தவிர வேறு வழியில்லையே. வடிவேலு இனி சினிமாவில் வாழ்வதும் பிழைப்பதும் மே 13ம்தேதி அவரது ஜாதக கட்டம் என்ன சொல்கிறது என்பதில்தானே இருக்கிறது.