தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் 'நேரம்' படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்க 'நேரம்' பட நாயகனான நிவின் பாலி நாயகனாக நடித்த 'பிரேமம்' படம் மே மாதம் மலையாளத்தில் வெளிவந்து மலையாளத் திரையுலகையே ஆட்டிப் படைத்தது. இளைஞர்கள் அந்தப் படத்தின் நாயகியான சாய் பல்லவியை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். சாய் பல்லவி நடித்த 'மலர்' என்ற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய அலையையே ஏற்படுத்தியது. இந்தப் படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய பலர் முயன்றார்கள். இப்போது விஜய் சேதுபதி நடிக்க தமிழில் ரீமேக் செய்யப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள 'நானும் ரௌடிதான்' படம் கடந்த வாரம் வெளிவந்து வசூலைக் குவித்து வருகிறது. படம் ஹிட்டானதும் தனுஷே விரைவில் தன்னுடைய தயாரிப்பில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக அறிவித்தார். அந்த அடுத்த படம்தான் 'பிரேமம்' படத்தின் ரீமேக் என்கிறார்கள். நிவின் பாலி கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அந்தப் படத்தை விஜய் சேதுபதியை வைத்தே தனுஷ் தயாரிக்க விரும்புவதாகத் தெரிகிறது.
'நானும் ரெளடிதான்' படத்தின் வெற்றி தனுஷையும், விஜய் சேதுபதியையும் மிகவும் நெருக்கமாக்கிவிட்டது என்றே கோலிவுட்டில் பலர் பொறாமைப்பட ஆரம்பித்துவிட்டார்களாம்.