பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வேதாளம் படத்தின் முன்னோட்டம், 29ம் தேதி வெளியாகிறது. விரைவில் சென்சார் செல்லும் இப்படம், எப்படியும், ஏ சான்றிதழ் தான் வாங்கும் என, விஜய் ரசிகர்கள், வலைதளங்களில் உசுப்பேற்றி வருகின்றனர்.
நானும் ரவுடி தான் பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி மார்க்கெட் ஏறுமுகத்தில் உள்ளது. கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத ஆக் ஷன் மற்றும் காதல் கலந்த கமர்ஷியல் படத்தில் நடிக்க, விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ரத்தினசிவா இயக்குகிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. தனுஷின், வொண்டர் பார் பட நிறுவனமும், தன் அடுத்த படத்திற்காக, விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளது.
பாகுபலி-3 வரப் போகிறது என்று திடீரென கிளம்பிய வதந்திக்கு, இயக்குனர் ராஜமவுலி முற்றுப்புள்ளி வைத்தாலும், பாகுபலி என்ற உலகம் தொடர்ந்து வாழும். என்ன நடக்கப்போகிறது என்று எனக்கு மட்டும் தான் தெரியும் என, வதந்தீக்கு, எண்ணெய் ஊற்றியுள்ளார்.
நடிகர் ஆர்யா - அனுஷ்கா ஷெட்டி நடித்த, இஞ்சி இடுப்பழகி படத்தின் இசை, 29ம் தேதி வெளியாகிறது. படத்திற்கு மரகதமணி இசையமைத்துள்ளார். இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், அடுத்த மாதம், 27ம் தேதி, 1,500 தியேட்டரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதே தேதியில், நடிகர் சூர்யாவின், பசங்க -2 படமும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகை சமந்தா, தன் அடுத்தடுத்த படங்களில், நெகடிவ் கதாபாத்திரங்களை ஏற்க உள்ளாராம்.
பிதாமகன் படத்திற்கு பின் பாலாவும், விக்ரமும் மீண்டும் இணையவுள்ளனர். தாரை தப்பட்டை படத்தை முடித்துள்ள இயக்குனர் பாலா, விக்ரமைச் சந்தித்து, அடுத்த படம் குறித்து பேசி உள்ளார். தற்போது விக்ரம், ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடித்து வரும் படம் முடிந்ததும், பாலா படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்னுடைய மனைவி கீதாஞ்சலி இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தை பார்த்தேன்; மெய்மறந்து போனேன். ஒவ்வொரு ஜோடியும் இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும், என, இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு செல்வராகவன் திரைக்கதை எழுத, அவரது மனைவி இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின், இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
சதுரங்க வேட்டை படத்திற்கு பின் நடிகர் நட்டி, எங்கிட்ட மோதாதே படத்தில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக, போங்கு படத்தில் நடிக்கிறார். இதில் ஜோடியாக ராய் லட்சுமி, பூஜா நடிக்கின்றனர். ரஜினியின் பிறந்த நாளான, டிசம்பர் 12 அன்று படப்பிடிப்பு துவங்குகிறது. சதுரங்க வேட்டை போன்றே, போங்கு படத்தின் கதையும் அமைந்துள்ளது.
பொறுத்தது போதும் பொங்கி எழு என்பது போல், நடிகர் ஸ்ரீகாந்தும், நேற்று முதல், டுவிட்டர் கணக்கு துவக்கியுள்ளார்.
கேப்டன் தன் மகன் சண்முக பாண்டியனை, சகாப்தம் படம் மூலம் ஹீரோவாக்கினார். ஆனால், அப்படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. இந்நிலையில் சமீபத்தில், பாகுபலி பார்த்த கேப்டன், அதே போன்ற சரித்திர பின்னணி கொண்ட கதையில், மகனை நடிக்க வைப்பது மட்டுமின்றி, ஹீரோயினாக தமன்னாவை, புக் செய்யவும் ஆர்வம் கொண்டுள்ளதாக, கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.